Nov 1, 2015

ஆத்தூரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

ஆத்தூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிக்கும் இடங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரங்கள் ஆர்டரின் பேரில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த பலகாரங்கள் தரமான பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா, அலுவலர்கள் இ.கோவிந்தராஜ், சுந்தர்ராஜன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ரயில் நிலையம் அருகே காரம் தயாரிக்கும் இடத்தைப் பார்வையிட்ட அவர் சுகாதாரமான முறையில் தயாரிக்க கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment