Jun 24, 2014

சேலம் அருகே சேகோ ஆலைக்கு சீல் வைப்பு - கிழங்கு மாவில் சாக்பீஸ் தூள் கலப்படம்

சேலம், ஜூன் 24&
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் அக்ரஹாரம் நாட்டார்மங்கலம் பகுதியில் ஸ்ரீஹரி சேகோ பேக்டரி என்ற தனியார் ஜவ்வரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஜவ்வரிசி தயாரிக்க தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான குழுவினர் இன்று ஸ்ரீஹரி சேகோ பேக்டரிக்கு சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலையில் ஜவ்வரிசி தயாரிக்க சோடியம் ஹைகோ புளோரைடு மற்றும் சல்பியூரிக் ஆசிட் ஆகியவற்றை பயன்படுத்துவது தெரியவந்தது. மேலும் உரிமம் இன்றி கடந்த 3 ஆண்டுகளாக ஆலை செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் ஆலையை பூட்டி சீல் வைத்தனர். ஆலையில் இருந்த தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் அழிக்கப்பட்டன. மேலும் ஆலையில் ஜவ்வரிசி தயாரிக்க மரவள்ளிகிழங்கு மாவு அரைக்கும் வசதி இல்லாததால், சேலத்தைச் சேர்ந்த ஜெகன், ஆத்தூரைச் சேர்ந்த ஜெகநாதன் ஆகிய புரோக்கர்களிடம் இருந்து அரைக்கப்பட்ட மரவள்ளி கிழங்கு மாவை வாங்கி ஜவ்வரிசி தயாரித்து வந்ததும், மரவள்ளி கிழங்கு மாவில் எடையை கூட்டுவதற்காக சாக்பீஸ் மாவு கலந்திருப்பதும் தெரியவந்தது. அதில் மக்காச்சோள மாவு கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் மாவின் மாதிரி எடுக்கப்பட்டு உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு சோத னைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத் தனர். அதன் முடிவு வந்த பின்னர் ஆலை ஓனர் மற்றும் மரவள்ளி கிழங்கு மாவு அரைத்துக்கொடுத்த புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் இயங்கி வந்த சேகோ ஆலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி, இதேபோல் ரசாயன பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததால் சீல் வைத் தனர். இதனால் நேற்று சேகோ ஆலை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு சீல் வைக்கப்பட்ட ஆலையை திறக்க அனுமதி வழங்கவேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஆலை உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FSSAI NOTIFICATION - LICENSE NUMBER & LOGO ON THE LABEL OF FOOD PRODUCTS EXTENDED UPTO 1.1.2015


DINAKARAN NEWS


திருவாடானையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அமோக விற்பனை


திருவாடானை, ஜூன் 24:
தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் திருவாடனையில் அமோக விற்பனை செய்யப்படுவதால், அவற்றை பறிமுதல் செய்து, கடைக்காரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை இருந்தபோதிலும், பல இடங்களில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகிறது. கடைக்காரர்கள் வழக்கமாக விற்கும் விலையைவிட ரூ.10 முதல் 20 வரை கூடுதலாக விற்பனை செய்கின்றனர்.
திருவாடனையில், சிறிய கடைமுதல் பெரிய கடை வரை மறைவாக வைத்து விற்பனை செய்கின்றனர். ஆரம்ப காலங்களில் தீவிரமாக சோதனை செய்த அதிகாரிகள், பின்னர் கண்டு கொள்ளவில்லை.
இதனால், தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் வியாபாரிகள் தாராளமாக விற்பனை செய்து வருகின்றனர். எனவே, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கார்த்திகேயன் என்பவர் கூறுகையில், புகையிலை மற்றும் பான்மசாலாவை பயன்படுத்துவோருக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதால், தமிழக அரசு தடைசெய்தது. இதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் நடைபெற்று வருகிறது. ஆனால், இவையெல்லாம் இருந்தாலும் கூட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை எப்போதும் போல நடைபெற்று வருகிறது. எனவே, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடைக்காரர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றார்.

பள்ளி முன் சுகாதாரமின்றி தின்பண்டங்கள் விற்பனை நகராட்சி பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்படுமா?


கரூர், ஜூன் 24:
கரூர் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் முன்பாக சுகாதாரமற்ற முறையில் பழங்கள், தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
கரூர் ஆசாத் ரோடு, கூத்தரிசிக்காரத் தெரு, லைட் ஹவுஸ், கோட்டைமேடு போன்ற பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இதுபோன்ற பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகளை குறிவைத்து பள்ளிகளின் முன்பாக பகல் நேரங்களில் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற பெரும்பாலான கடைகள் சுகாதாரமற்ற முறையில் தின் பண்டங்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறையாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

சேலம் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை முற்றுகை ‘சீல்’ வைக்கப்பட்ட ஆலையை திறக்க வலியுறுத்தல்

சேலம், ஜூன்.24-
சேலம் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ‘சீல்’ வைக்கப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆலைக்கு சீல் வைப்பு
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஜவ்வரிசி ஆலைக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் கடந்த 20-ந் தேதி ஆய்வுக்கு சென்றனர். அப்போது ஆத்தூர் பகுதிகளில் இருந்து மரவள்ளிக்கிழங்கு மாவை வாங்கி வந்து கலப்படம் செய்து ஜவ்வரிசி உற்பத்தி செய்து வந்ததும், ஜவ்வரிசியில் ராசாயன பவுடர் மற்றும் மக்காச்சோளம் மாவு கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ஜவ்வரிசி ஆலை மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தின் மூலம் உரிமம் பெறாமல் இயக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஜவ்வரிசி ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதிகாரி முற்றுகை
இந்தநிலையில், சேலம் தாலுகா ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் நேற்று காலையில் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், அலுவலகத்தில் இருந்த மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவை முற்றுகையிட்டனர்.
அப்போது, ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியில் சீல் வைக்கப்பட்ட ஜவ்வரிசி ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் கலப்படம் இல்லாமல் ஜவ்வரிசி மாவு தரமான முறையில் உற்பத்தி செய்வதாகவும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் தரப்பில் அதிகாரியிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
3 மணி நேரம் பேச்சுவார்த்தை
இதையடுத்து ஜவ்வரிசி ஆலையில் எடுக்கப்பட்ட மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் அறிக்கை வந்தபிறகு ஜவ்வரிசி ஆலையை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு பதில் சொல்வதாக ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களிடம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறினார். இது தொடர்பாக ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், டாக்டர் அனுராதாவை சுமார் 3 மணி நேரம் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீல் வைத்த ஆலையை திறக்க வேண்டும்
இது குறித்து சேலம் ஜவ்வரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மதிவாணன் கூறுகையில், ஜாகீர்ரெட்டிப்பட்டியில் ஒரு ஜவ்வரிசி ஆலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளோம். மேலும், சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில், சுகாதாரமான முறையில் தரமானதாக ஜவ்வரிசி மாவில் கலப்படம் இல்லாமல் உற்பத்தி செய்வோம் என்று உறுதி கூறினோம், என்றார்.

3 packaged drinking water plants shut down by FDA

PUNE: Officials of the Food and Drugs Administration (FDA) closed down three packaged drinking water plants in Baramati that were operating without mandatory licences.
Licences from the Bureau of Indian Standard (BIS) and Food Safety and Standards Authority of India (FSSAI) are prerequisites to run a packaged drinking water plant.
"We closed down the plants after we found that they were operating without the necessary licences. The owners have been directed not to operate the plants till they fulfil all the required compliances," said Shashikant Kekare, joint commissioner (food), FDA.
Sanjay Naragude, assistant commissioner (food) , FDA,Pune, said,"Yuvraj Dhembre, our food safety official who is posted in Baramati, received a tip-off during his routine round in Baramati market that the plants were processing and selling water in huge quantities. We raided the plants and found that they did not possess the essential licences."
Naragude said the three plants had only started operating this summer. "They would process water with the help of treatment machinery like reverse osmosis units, carbon filters and sand filters and sell the processed water in 20 litre containers to caterers, offices and wedding organisers. The plants did not have a laboratories, which is extremely important to check potability of water after processing, nor did they have test reports of their processed water from other laboratories," he said.
The increased demand for processed drinking water has resulted in proliferation of packaged drinking water plants. To make easy money, some plant owners compromise the quality of the water, which can put people's lives at risk, officials said.
Recently, traces of cyanide - a powerful poison and chemical contaminant - were found in packaged drinking water during a routine FDA exercise to check samples. The FDA had collected the samples from two plants in Jalna and Parbhani districts.
The samples were tested at the FDA's referral laboratory, which confirmed the presence of cyanide in unsafe proportions, following which the association filed an FIR against both the plant owners. Both plants were closed down after the FDA issued temporary prohibitory orders.

BAN ON IMPORT OF MILK PRODUCTS FROM CHINA EXTENDED FOR A YEAR

Six years has passed and India has decided to continue with the ban on import of milk and milk products from China. The ban was imposed in 2008 following the fear that the Chinese dairy products contained melamine, a deadly chemical.
Last week, the Government extended the ban for another year till further orders. Sources in the Union Health Ministry said that the Food Safety and Standard Authority of India (FSSAI) has issued an advisory saying that following a meeting of the Ministries concerned, the ban has been extended to one year as the neighbouring country has not provided any data addressing the safety concerns.
The ban was to expire on June 23 with the Government in between extending it around thirteen times since 2008 when it was first implemented on the allegations that the dairy products in the neighbouring country had presence of melamine, used for making plastics and fertiliser.
“Ban on import of milk and milk products from China may be extended for a period of one year from June 23, 2013 unless there are dependable reports available about a significant improvement in the situation,” said the sources.
They said, “Consultations were held on June 18 with the concerned departments and Ministries to review the ban on Chinese milk products like chocolates and chocolate products, candies, confectionary, and food preparations made with milk or milk solids.
“The meeting decided the ban be extended for next one year unless there are dependable reports about a significant improvement in the situation,” the sources said.
India, the world’s largest milk producer, does not import milk products from China, but the ban is being imposed as a preventive measure. The country’s milk production is estimated to be 133 million tonne in 2012-13.

கோவை வாலாங்குளம் பாலத்தின் கீழ் காலாவதியான குளிர்பானம் குவிப்பு

கோவை, ஜுன் 24:
கோவை வாலாங்குளம் பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்ட காலாவதியான குளிர்பான பாட்டில்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடந்தன.
கோவை வாலாங்குளபாலத்தின் அடியில் 2011ம் ஆண்டு காலாவதியான குளிர்பான பாட்டில்கள் கொட்டப்பட்டு கிடந்தன.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 180 மில்லி பிடிக்க கூடிய மாம்பழ குளிர்பானங்களை மர்ம நபர்கள் வேன் அல்லது லாரி மூலமாக கொண்டு வந்து கொட்டி சென்றதாக தெரிகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், பாலத்தின் அடியில் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். சிறுவர்கள் அப்பகுதிக்கு விளையாட செல்லும் போது அந்த குளிர்பானத்தை குடிக்கும் ஆபத்தும் உள்ளது.
குளிர்பான பாட்டிலில் குறிப்பிடப்பட்ட பெயர் கேரளாவில் விற்கப்படும் குளிர்பான வகை என தெரிகிறது. எனவே, கேரளா வில் இருந்து குளிர்பான நிறுவனம், அல்லது ஏஜென்சியை சேர்ந்த ஊழியர்கள் இரவு நேரங்களில் வாகனம் மூலமாக எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர்.
சுகாதார அதிகாரிகள் உடனடியாக குளிர்பானங்களை அப்புறப்படுத்தி சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வெட்ட வெளியிலே கோவையில் கொட்டிக் கிடக்குது 'விஷ பானம்'


கோவை: கோவையில், காலாவதியான குளிர்பானம் முறையாக அழிக்கப்படாமல், வெட்டவெளியில் கொட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் யாராவது எடுத்து பருகினால், உடல்நலக்கோளாறு நேரிடும் அபாயமுள்ளது.
உக்கடம் - சுங்கம், பை-பாஸ் ரோட்டில், வாலாங்குளம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே, 200 மி., குளிர்பான 'பெட்' பாட்டில்கள் குவியல், குவியலாக ஆயிரக்கணக்கில், கொட்டப்பட்டுள்ளன. பாட்டில் ஸ்டிக்கரில், பி.எஸ்.ஆர்., புட்ஸ், மேங்கோ லைப் ஜூஸ்; முகவரி, 47, பி.பி., அம்மன் கோவில் வீதி, பல்லாவரம், சென்னை; குளிர்பானத்தின் தயாரிப்பு தேதி பிப்., 12, 2011 என்றும், மூன்று மாதம் வரை பயன்படுத்தப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது. காலாவதியான குளிர்பானம், முறையாக அழிக்கப்படாமல் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. சிறுவர்களோ, விழிப்புணர்வு இல்லாதவர்களோ அவற்றை எடுத்து பருகினால், உடல்நலக்கோளாறு நேரிடும் அபாயமும் உள்ளது. பாட்டில்கள் கொட்டப்பட்டது, உணவுப்பொருள் பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கும், மாநகராட்சி பொதுச்சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. காலாவதியான குளிர்பானத்தை குடித்தால், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், வயிறு சம்பந்தமான பல்வேறு உபாதைகள் ஏற்படும் என்கின்றனர், டாக்டர்கள். மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருணாவிடம் கேட்டபோது, ''பொது இடத்தில், காலாவதி குளிர்பான பாட்டில்கள் கொட்டப்பட்டது குறித்து, தகவல் தெரியாது. உடனடியாக சேகரித்து அழிக்கப்படும்,'' என்றார்.
அழிப்பது எப்படி?
கோவை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறியதாவது: காலாவதி குளிர்பான பாட்டில்கள், பொதுஇடத்தில் கொட்டப்பட்டது குறித்து எமக்கு தகவல் இல்லை; ஆய்வாளர்களை அனுப்பி விசாரிக்கிறேன். உணவு பொருள் கலப்படம் மற்றும் காலாவதி உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க, மூன்று நாட்களாக கோவையில் ஆய்வு செய்து வருகிறோம். பயந்து, குளிர்பான பாட்டிலை கொட்டியிருப்பார்கள். அவை, மாநகராட்சி குப்பை கிடங்கில் அழிக்கப்படும். குளிர்பான தயாரிப்பாளரிடம் விசாரிக்கப்படும். காலாவதியான குளிர்பானங்களை, வெட்டவெளியில் வீசக்கூடாது. அந்தந்த நிறுவனங்களே, திரும்ப சேகரித்து, தொழிற்சாலையில், அதற்குரிய முறைகளை கையாண்டு அழிக்க வேண்டும். பொது இடத்தில் கொட்டியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கதிரவன் தெரிவித்தார்.

குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு குமரியில் கார்பைடு கல் வைத்து விற்கப்படும் மாம்பழங்கள்

நாகர்கோவில், ஜூன் 24:
குமரியில் பல இடங்களில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு உள்ளன. இதை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்துக்கு தனி மவுசு உண்டு. தமிழகம் முழுவதுமே மாம்பழம் சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்துக்கு சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. ஆரம்பத்தில் வரத்து குறைவால் ஒரு கிலோ பங்கனப்பள்ளி மாம்பழம் ரூ. 70 முதல் 80 வரையிலும், ஒட்டு மாம்பழம் ரூ. 40 முதல் 45 வரையிலும், செந்தூரம், ருமேனியா, மல்கோவா போன்றவை ரூ. 60 முதல் 80 வரையிலும் விற்பனை ஆனது.
தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை சற்று குறைந்து இருக்கிறது. மல்கோவா போன்ற உயர் ரக மாம்பழங்கள் கூட ரூ.60, ரூ.50 என்ற வகையில் கிடைக்கின் றன. ஒட்டு மாம்பழம் ரூ. 30 முதல் 40 வரை விற்கப்படுகிறது.
இதற்கிடையே ஒரு சில வியாபாரிகள், கார்பைடு எனப்படும் சுண்ணாம்புக் கல்லை கொண்டு மாம்பழங்களை ஒரே நாளில் பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். முக்கிய மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஒரு சில கடைகளிலும் இது போன்ற கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் விற்பனைக்காக வந்து இருக்கின்றன. இந்த பழங்களை சாப்பிடும் போது உடல் கோளாறு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படுகிறது.
சுகாதார துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை இதை கண்காணித்து இது போன்று கார்பைடு கல் வைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும் பழங்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஆனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அமோகமாக விற்பனை ஆகிறது.
இந்த பிரச்னை குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்ட போது, நாகர்கோவிலில் ஒரு சில கடைகளில் விற்பனையான மாம்பழங்களை பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறாம். அதன் முடிவு எங்களுக்கு இன்னும் வர வில்லை. அந்த முடிவு வந்த பிறகு தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றனர். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டவை என தெரிந்த பிறகும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் சுகாதார உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அங்கன்வாடி மையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

அண்ணாநகர், ஜூன் 24:
அண்ணாநகர் பகுதியில் 58 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு உணவு தயாரிப்பின்போது, உரிய நடைமுறைகள் பயன்படுத்தப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், அமைந்தகரை பொன்னுவேல் பிள்ளை தோட்டத்தில் உள்ள 3 அங்கன்வாடி மையத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கியுள்ளனர். ஒன்றரை வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு ஊட்ட சத்து மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட உணவு தயாரிக்கும் ஊழியர்கள் கையுறை, தலை கவசம், மேலாடை ஆகியவை முறையாக பயன்படுத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு, அலுவலர்கள் சதாசிவம், மணிமாறன், கண்ணன் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மேலும், தயாரிக்கப்பட்ட உணவு, தரமானதாக உள்ளதா எனவும் பரிசோதனை செய்தனர். சுகாதாரம் இல்லாமல் தயாரிக் கும் உணவுகளால் வயிற்றுப்போக்கு உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். அதை தடுக்கவே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விலை குறிப்பிடாமல் விற்பனை கோயம்பேடு பஸ் நிலைய கடைகளில் 50 கிலோ உணவு பொருள் பறிமுதல்அதிகாரிகள் அதிரடி


அண்ணாநகர், ஜூன் 24:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடைகளில் விலை குறிப்பிடாமல் இருந்த 50 கிலோ உணவு பொருட் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நடைமேடைகளில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு வரும் பயணிகள் பிஸ்கட், சாக்லெட், தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கி செல்கின்றனர். பிஸ்கட் மற்றும் தின்பண்டங்களை எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, தொழிலாளர் உதவி ஆணையர் தாலிகாபேகம் தலைமையில் அதிகாரி திவ்யநாதன் முன்னிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அங்குள்ள கடைகளில் விலை குறிப்பிடாமல் இருந்த 50 கிலோ தின்பண்டங்களை பறிமுதல் செய்தனர். மேலும், 20 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதிகாரிகளின் திடீர் சோதனையால், வியாபாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.