Apr 12, 2014

60 கிலோ குட்கா பறிமுதல்

அண்ணாநகர், ஏப். 12: 
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் நேற்று காலை, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில், அலுவலர்கள் சோதனை நடத்தினர். 
அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 60 கிலோ எடையுள்ள பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீண்டும் கடைகளில் குட்கா விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.