Nov 25, 2017

நோய் பரப்பும் இறைச்சிக் கூடம்... களத்தில் இறங்கிய ஜூ.வி!

அதிரடி ஆக்‌ஷன் ரிப்போர்ட்
அசைவப் பிரியரா நீங்கள்... ஒரு நிமிஷம்! சென்னை மக்களுக்கு 90 சதவிகித இறைச்சியை அளிக்கும் மாநகராட்சி இறைச்சிக் கூடத்தின் மோசமான சூழ்நிலையைப் பாருங்கள். இங்கிருந்து வரும் இறைச்சிதான் பெரும்பாலான கிச்சன்களுக்குப் போகிறது. 
துர்நாற்றம் படிந்துகிடக்கும் இந்த இடத்துக்குள் மூக்கைப் பிடித்துக்கொண்டு நுழைந்தோம். நுழைவாயில் அருகே சாக்கடையில் கால்நடைகளின் ரத்தக்கழிவுகள் வழிந்தோடின. அருகிலிருக்கும் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தவர்களும் கைக்குட்டையை மூக்கில் கட்டியபடியே நின்றிருந்தனர். அங்கும் ரத்தம் தேங்கிக்கிடந்தது. உள்ளே வெட்டப்பட்ட மாடுகளின் தலைகள் குவியலாகக் கிடந்தன. மாட்டின் தோலை விரித்து அதில் இறைச்சியைப் பரப்பி விற்பனை செய்துகொண்டிருந்தனர். 
‘ஆட்டுத்தொட்டி’ என அழைக்கப்படும் இந்த இடம், திரு.வி.க. நகர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பில் செயல்பட்டுவருகிறது. 1903-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப் பட்ட ஆட்டுத்தொட்டி, இப்போது ஒட்டுமொத்த வடசென்னைக்கும் தொற்றுநோயைப் பரப்பும் கூடமாகிவிட்டது. அந்தப் பகுதியின் குடியிருப்புவாசிகள், ஜூ.வி. அலுவலகத்துக்கு வந்து புகார் செய்தனர். “கெட்டுப்போன இறைச்சிகளைக் குவியல் குவியலாகப் போட்டு ஒரே துர்நாற்றம் வீசுகிறது’’ எனத் தாங்கள் தினம்தினம் அனுபவித்து வரும் அவஸ்தைகளை வேதனையுடன் சொன்னார்கள்.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த ஆட்டுத்தொட்டியில் தினமும் 3,500 ஆடுகளும் (ஞாயிறுகளில் 8,000 வரை), 150 மாடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவை, மருத்துவ சீலுடன் இறைச்சி வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. மூவாயிரம் பேருக்குமேல் தினமும் இங்கு வந்துபோகிறார்கள். தொழிலாளர் களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் மேல்! மழைக்காலத்தில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியதால் ஓரிரு நாள்கள் இறைச்சி வெட்டுவதைத் தள்ளிவைத்தார்கள். மழைக்குப் பிறகு ஏற்பட்ட சகதி அள்ளப்படாமல் கிடந்தது. 
நாம் வந்த தகவலறிந்து, தொழிலாளர்கள் திரண்டுவந்து தங்கள் நிலையைச் சொன்னார்கள். சென்னை ஆடு இறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கப் பொருளாளர் ஸ்ரீராமுலு மற்றும் கோவிந்தராஜ் உள்ளிட்டோர், ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த கொட்டிலைக் காட்டினார்கள். ‘‘திறந்தவெளியில் ஆடுகள் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டிலையில் மழைக்காலத்தில் சகதியில் சிக்கி, தினமும் பத்து ஆடுகள் வரை இறந்துபோகின்றன. ஆடுகள் குடிக்கத் தண்ணீர் வசதிகூட இல்லை. பாதுகாப்பான கொட்டகை அமைத்துத் தரும்படி, பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றனர். 
சென்னை மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சம்பத், அபோய் ஆகியோர் மாடு வெட்டும் இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். ‘‘மாடுகள் சில சமயங்களில் தொழிலாளர்களை முட்டித் தள்ளிவிடுகின்றன. படுகாயம் அடையும் தொழிலாளர்களை, உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துப்போக முடியவில்லை. ரிக்‌ஷா தொழிலாளர்கள், இறைச்சி விற்கும் பெண்கள், லாரி மற்றும் வேன் டிரைவர்கள், கிளீனர்கள், இறைச்சி வியாபாரிகள் எனப் பலரும் அதிகாலையில் இங்கே குவிகிறார்கள். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீரோ, கழிப்பிட வசதியோ இல்லை. ஆட்டுத்தொட்டியைச் சுற்றிலும் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததுதான், இங்கு நிலவும் சுகாதாரச் சீர்கேட்டுக்குக் காரணம்’’ என்றனர்
ஆட்டுத்தொட்டியை சுற்றி வந்தபோதே, தொகுதி எம்.எல்.ஏ தாயகம் கவியுடன் தொடர்புகொண்டோம். ‘‘அருகில்தான் இருக்கிறேன். நேரில் வருகிறேன்’’ என்றார். சில நிமிடங்களில் வந்துசேர்ந்தார். அப்போது நேரம் காலை 9.30. மாட்டுக்கறி விற்றுக்கொண்டிருந்த ஜானகி என்கிற பெண்மணி, ‘‘அய்யா... இங்க பாருங்க, எப்படி ஈ மொய்க்குதுன்னு! போன வாரம் எலிக்காய்ச்சல் வந்து, படாதபாடு பட்டேன். நாங்க கடைபோட இங்கேயே இடம் ஒதுக்கித் தாருங்கள்’’ என்றார். 
‘‘ஒரு மாதம் முன்பு நான் அதிகாரிகளுடன் இங்கே வந்தேனே. அதன்பிறகு ஏதாவது சரிசெய்தார்களா?’’ எனத் தொழிலாளர்களிடம் கேட்டார் தாயகம் கவி. ‘‘எதுவுமே நடக்கவில்லை’’ எனத் தொழிலாளர்கள் சொல்ல... எம்.எல்.ஏ முகத்தில் கோபம் கொப்பளித்தது. மாடுகளை வெட்டும் கூடத்துக்கு முதலில் சென்றார். மேற்கூரை ஓடுகள் உடைந்து மிகவும் மோசமாக இருந்தது. நம் பக்கம் திரும்பி, ‘‘மாநகராட்சி அதிகாரிகளை நேரில் வரவழைத்து, ‘இடியும் நிலையில் உள்ள இந்தக் கட்டடத்தை உடனே இடித்துவிடுங்கள். இல்லாவிட்டால் தொழிலாளர்களுக்கு ஆபத்து’ எனச் சொன்னேன். ஒரு மாதம் ஆகியும் இடிக்கவில்லை. தொழிலாளர்கள் ஓய்வெடுக்க, அருகில் உள்ள ஓர் அறையை ஒதுக்கித் தரும்படிக் கேட்டேன். அதையும் இதுவரை செய்து தரவில்லை” என்றார். 
‘‘ஆட்டுத்தொட்டியின் ஒரு பகுதியில், பயோ கேஸ் முறையில் இறைச்சிக் கழிவுகளைச் சுத்திகரித்து, தண்ணீரை அருகில் உள்ள மாநகராட்சி பூங்காக்களுக்கு அனுப்பும் திட்டம் எப்படி நடக்கிறது?” என்று கேட்டபடி, அதைப் பார்வையிடச் சென்றார். அங்கிருந்த ஊழியர் ஒருவர், ‘‘டிசம்பரில் இது செயல்பட ஆரம்பிக்கும். தொட்டிகள், இணைக்கும் குழாய்கூட ரெடி. அருகில் அறை கட்ட வேண்டியதுதான் பாக்கி’’ என்றார். சுற்றியிருந்தவர்கள், ‘‘இவரு சொல்றதெல்லாம் நடக்காது’’ என்றனர். அந்த ஊழியர் ஏதேதோ சொல்லிச் சமாளித்தார்.
கழிவுநீர்த் தொட்டி அருகே எம்.எல்.ஏ-வை அழைத்துச்சென்ற சங்க நிர்வாகிகள், சுகாதாரச் சீர்கேடுகளைக் காட்டினார்கள். மாநகராட்சி ஊழியரிடம், ‘‘எப்போது சுத்தம் செய்தீர்கள்?’’ எனக் கேட்டார் எம்.எல்.ஏ. அவர் பதில் சொல்வதற்கு முன்பே, ‘‘எட்டு மாதங்கள் கடந்து விட்டன’’ என்றார்கள் தொழிலாளர்கள்.
ஒரு நிமிடம் யோசித்த எம்.எல்.ஏ, அங்கிருந்தவர்களுடன் இணைந்து ஆட்டுத் தொட்டியின் ஒரு பகுதியில் உட்கார்ந்துவிட்டார். ‘‘பலமுறை பொறுமையாகச் சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. இன்று ஒரு முடிவு தெரியாமல் நகர மாட்டேன். இங்கிருக்கற கழிவுகளை அகற்றணும். கழிவுநீர்த் தொட்டியை கிளீன் செய்யணும். அதுவரை இங்கேயே தொழிலாளர்களுடன் உட்கார்ந்திருப்பேன்’’ என்றார். உயர் அதிகாரிகளுக்குத் தகவல் போனது. 
ஆட்டுத்தொட்டியில் வேலைபார்க்கும் பெண்கள், ‘‘ஒரு குடம் தண்ணீர்10 ரூபாய்க்கு வாங்குகிறோம்” என ஆரம்பித்து அவலங்களை எம்.எல்.ஏ-விடம் அடுக்கினார்கள். சங்க நிர்வாகிகளோ, ‘‘மூன்று டேங்குகளை எங்கள் செலவில் அமைத்து இரண்டு வருடங்களாச்சு. மெட்ரோ வாட்டரிடம் பலமுறை சொல்லியும், அவற்றில் தண்ணீர் நிரப்புவதில்லை’’ என்றார்கள்.
சம்பந்தப்பட்ட 72-வது வார்டு மெட்ரோ வாட்டர் அதிகாரியை எம்.எல்.ஏ போனில் அழைத்தபோது, ‘‘அது 70-வது வார்டில் வரும்’’ என்றார். 70-வது வார்டு அதிகாரியோ, ‘‘இல்லை. அது 72-வது வார்டுதான்’’ என்றார். குழப்பமான எம்.எல்.ஏ., இருவரையும் நேரில் வருமாறு அழைத்தார். வார்டு எல்லைப் பிரச்னையைத் தீர்க்க முடியாத நிலையில், உயர் அதிகாரியிடம் விஷயத்தைச் சொல்லி, ‘‘ஆட்டுத்தொட்டி டேங்குகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுங்கள்’’ எனக் கேட்டுக்கொண்டார். 
‘‘2009-ல், அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகத் தளபதி மு.க.ஸ்டாலினும் மேயராக மா.சுப்பிரமணியனும் இருந்தார்கள். அப்போது பழைய ஆட்டுத்தொட்டியை நவீனமயமாக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுவரை பணிகள் நடந்தன. அ.தி.மு.க ஆட்சி வந்ததும், மொத்தத் திட்டத்தையும் முடக்கிவிட்டனர். இதுபற்றி சட்டசபையில் பேசியும் இதுவரை நோ ஆக்‌ஷன். இந்த ஆட்டுத்தொட்டியைச் சீரமைக்க என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கித் தர ரெடி. என் வேண்டுகோளை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளுமா?’’ எனக் கேட்டார்.
மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் கருத்து கேட்க முயன்றோம். முடியவில்லை. அடுத்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியைத் தொடர்புகொள்ள முயன்றும் பேச முடியவில்லை. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேச முடிந்தது. ‘‘ஆட்டுத் தொட்டி, மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ்தான் வருகிறது. எங்கள் துறையின் கீழ் வராது. நான் மாநகராட்சி கமிஷனரிடம் பேசி, சுகாதாரச் சீர்கேடுகளுக்கு உடனே நடவடிக்கை எடுக்கச்சொல்கிறேன்’’ என்றார்.
இதற்கிடையில், ஆட்டுத்தொட்டியில் எம்.எல்.ஏ-வின் உள்ளிருப்புப் போராட்டத்தைக் கேள்விப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சிறிய ரக புல்டோசரையும், கழிவுநீர் அகற்றும் பணியாளர் களுடன் லாரியையும் அனுப்பிவைத்தனர். மின்னல் வேகத்தில் சுத்திகரிப்புப் பணிகள் நடந்தன. மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, ஆட்டுத்தொட்டியின் ஒரு பகுதியில் இருந்த கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. 
‘‘மொத்தக் கழிவுகளையும் அகற்ற வேண்டும்’’ எனச் சொல்லிவிட்டு, போராட்டத்தை முடித்துக்கொண்டு எம்.எல்.ஏ புறப்பட்டார். சங்க நிர்வாகிகளும் குடியிருப்புவாசிகளும் நம்மைச் சூழ்ந்துகொண்டு ஜூ.வி-க்கு நன்றி சொன்னார்கள்.
நிரந்தரத் தீர்வுக்கு நிதி தருவதாக எம்.எல்.ஏ தாயகம் கவி சொல்லிவிட்டார்... மாநகராட்சி என்ன செய்யப் போகிறது?

உணவுப் புரட்சியின் மாயவலை..! துரித உணவுகள் வேண்டாமே

துரித உணவுகள்... இவற்றின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க, மேலை நாடுகளே இயற்கையான உணவுகளைத் தேடத் தொடங்கிவிட்டன. நாமோ இன்னமும் ஃப்ரைடு ரைஸ், பர்கர், பீட்ஸா... போன்ற துரித உணவுகளின் மாயவலையில் சிக்கிய மான்களாக அவதிப்படுகிறோம். விரைவில் இந்த மாயவலையைக் கிழித்துக்கொண்டு வெளிவராவிட்டால், நோய்களின் கூடாரமாக மாறிவிடும் நமது உடல்.
வரலாற்றுப் பாதை:
துரித உணவுகளின் வரலாற்றுப் பாதையை உற்று கவனித்தால், அவற்றுக்கும் நமது வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. வேறு சூழலில் வாழும் மக்களின் உணர்வுடனும் வாழ்வுடனும் தொடர்புகொண்டிருக்குமே தவிர, நமது வாழ்வுக்கும் உணர்வுக்கும் அவற்றோடு எந்தச் சம்பந்தமும் இருக்காது. ஆனால், இப்போது இருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது, சீராக பயணித்துக்கொண்டிருக்கும் நமது உணவு வரலாற்றுப் பாதை, இனி திசைமாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படத்தான் செய்கிறது. நமது பாரம்பர்ய வரலாற்றுப் பாதையில் பயணித்து வரும் உணவுகள், நிச்சயமாக நோய்களை உண்டாக்காது. ஆனால், சமீபத்தில் நுழைந்து உணவுப் புரட்சி ஏற்படுத்திக்கொண்டிருக்கும் துரித உணவுகள் உண்டாக்கும் நோய்களோ எண்ணிலடங்காதவை.
வாலிபருக்கு மாரடைப்பு!
சத்துக்கள் நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகளை அடித்து விரட்டிவிட்டு, துரித உணவுகளைப் பெருமைப்படுத்துகிறோம். `மினி சைஸ் சீஸ் சாண்ட்விச்’, `மீடியம் சைஸ் பர்கர்’, `லார்ஜ் சைஸ் ஃபேமிலி பீட்ஸா’... என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சைஸ் வாரியாகப் பிரித்து உண்கிறோம். நோய்களோ குழந்தைகள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமெல்லாம் பார்ப்பதில்லை. எழுபது வயது முதியவர் மாரடைப்பால் மரணம் என்பதற்கும், இருபத்தைந்து வயது வாலிபர் மாரடைப்பால் மரணம் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது?! தவறான உணவுப் பழக்கத்தால், இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படும் அதிர்ச்சியான செய்திகள் நமது செவிகளில் கேட்கத் தொடங்கிவிட்டன. தவறான உணவுப் பட்டியலில், துரித உணவுகள் முக்கிய பங்கு வகிப்பவை.
உடல்பருமன்:
துரித உணவுகள் நமது சுவை உணர்ச்சிகளுக்கு மகிழ்ச்சியூட்ட மட்டும் தயாரிக்கப்படுபவை. உடல்நலத்தை மேம்படுத்தக்கூடிய எந்தவிதமான ஆரோக்கியக் கூறுகளும் அவற்றில் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. கலோரிகள் நிறைந்த உணவுகளாக இருப்பதால், உடலை விரைவாக பருக்கச் செய்யும் திறன் வாய்ந்தவை. உடல்பருமன் நோய் அதிகரிப்பதற்கு இவை முக்கியப் பங்காற்றுகின்றன. ஒரு முழு பீட்ஸா உட்கொண்டால், உடலில் சேரும் கலோரிகளைக் கரைக்க பல கிலோமீட்டர் தொலைவு வேகமாக ஓடவேண்டியிருக்கும். நாம் முதலில் சில மீட்டர்களாவது தினமும் நடக்கிறோமா என்பதே கேள்விக்குறி. பின் எப்படித் தேவையில்லாமல் அதிகரித்த கலோரிகளை வெளியேற்றுவது. இந்த கலோரிகள், உடலில் கொழுப்பு சேர்மானத்தை அதிகரிக்கச்செய்து, கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும்.
சர்க்கரைநோய்... ஊட்டசத்துக் குறைபாடு!
அவசரத்துக்கு ரெடிமேடாகக் கிடைக்கும் துரித உணவுகள், அவசர அவசரமாக நோய்களை உண்டாக்கும். இன்சுலின் சுரப்பதில் பாதிப்பை உண்டாக்கி, சர்க்கரைநோயை துரித உணவுகள் உண்டாக்குவதாக அமெரிக்காவின் `National Institutes of Health (NIH)’ வெளியிட்ட ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. பத்து வயது சிறுவனுக்குக்கூட இரண்டாம் வகை சர்க்கரைநோய் (Type – 2 Diabetes) வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். பிள்ளைகள் தொடர்ந்து துரித உணவுகளைச் சாப்பிடும்போது, உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், ஊளைச்சதை மட்டுமே வளரிளம் பருவத்தில் அதிகரிக்கும். உடல் வளர்ச்சிரீதியில் பல செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
சமாதானம் செய்ய பீட்ஸா, பர்கர்!
பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த, பள்ளிக்குப் போகும் வழியில் பீட்ஸா, பர்கர்களை வாங்கிக் கொடுக்கும் சில பெற்றோர்கள், தங்கள் வழிமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. நீங்கள் குழந்தைகளைச் சமாதானப்படுத்துகிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களுக்கு நோய்களை வாங்கிக் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு எதிரி ஆகலாமா? ’இன்னைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வா, ஈவினிங் உனக்கு ஒரு பர்கர் வாங்கித் தரேன்’ என்று பர்கர்களை ஊட்டி வளர்த்தால், பர்கர் போன்ற உருண்டையான தோற்றத்தில் உங்கள் குழந்தைகளை விரைவில் பார்க்கலாம். கண்டிப்புடன் இவை போன்ற உணவுகளுக்கு தடை விதிப்பதில் எந்தப் பாரபட்சமும் பெற்றோர்கள் காட்டக் கூடாது.
உப்பு… வெள்ளை சர்க்கரை…
துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்தக் குழாய்களில் கொழுப்புத் திட்டுக்கள் படிந்து, அவற்றின் சுற்றளவைக் குறுக்கி, குருதி சுற்றோட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி, இதய நோய்களை உண்டாக்கும். இதிலிருக்கும் உப்புகள் காரணமாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில் நேரடியாக உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் நடுவயது உயர் ரத்த அழுத்த நோயாளிகள், மறைமுகமாக உப்புகள் நிறைந்த துரித உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது அறியாமை. அளவுக்கு அதிகமாக உப்புகளோடு வெள்ளைச் சர்க்கரையும் கலந்த சுவையூட்டும் உணவுகள், மனதுக்கு களிப்பை உண்டாக்கி, ஆரோக்கியத்துக்கு வேட்டுவைத்துவிடும்.
ஹார்மோன்கள் பாதிப்பு!
ஹார்மோன் சமநிலையைத் தகர்த்து, உடலின் செயல்பாடுகளில் பல்வேறு மாறுதல்களை துரித உணவுகள் உண்டாக்கிவிடுகின்றன. இளம் பெண்களுக்கு சினைப்பைக் கட்டிகள் அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணம் ’ஜங் ஃபுட்ஸ்’ எனப்படும் துரித உணவுகள்தாம். எள்ளுருண்டைகளையும், உளுத்தங்களியையும் அதிகமாகச் சாப்பிட்ட முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு சினைப்பைக் கட்டிகள் என்றால் என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை.
பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகள்...
முறையான உணவியலை கற்றுக்கொடுக்கவேண்டிய பள்ளிகள், தவறான உணவுகளை அறிமுகப்படுத்துகின்றன. சில பள்ளி கேன்டீன்களில் அதிகம் விற்பனையாகும் சிற்றுண்டி பீட்ஸாவாகத்தான் இருக்கிறது. எண்ணெயில் பொரித்த சிப்ஸ் வகையறாக்களும், பாட்டில்களில் அடைக்கப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்களும், சீஸ் தடவிய பர்கர், பீட்ஸாக்களும் சில பள்ளிகளின் உணவுப் பட்டியலில் தவறாமல் இடம்பெறுகின்றன. அதுவே மறுபுறம், அரசுப் பள்ளிகளில் இருக்கும் சத்துணவு கேன்டீன்களில் கிடைக்கும் கீரைகளும், காய்களும், முட்டைகளுமே எளிமையான சிறந்த தேர்வு.
உணவியல் கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் தேவை!
லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு கல்வி கற்றுக் கொடுக்கும் பல தனியார் பள்ளிகள், உணவு விஷயத்தில் தேர்ச்சி பெறுவதில்லை. பள்ளிப் பருவத்தில் கற்றுக்கொண்ட தவறான உணவியல் பழக்கம், வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. முறையற்ற உணவியலைக் கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் படிக்கும் நிறைய குழந்தைகளுக்கு உடல்பருமன் பிரச்னை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கல்வியோடு சேர்த்து, உணவியலையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை நாடுவது சிறந்தது. ’துரித உணவுகளை அறிமுகப்படுத்தாமல் வளர்த்தாலும், பள்ளிகளில் துரித உணவுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர்’ என்பது பெற்றோர்களின் ஆதங்கம். இப்போது துரித உணவுகளுக்கும், பன்னாட்டுக் குளிர்பானங்களுக்கும் பல பள்ளி வளாகங்களில் தடைவிதிக்கத் தொடங்கியிருப்பது ஆறுதல் தரக்கூடிய விஷயம்.பீட்ஸா, பர்கர்களில் இருக்கும் அசைவத் துண்டுகள் எப்போது சமைக்கப்பட்டது என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா? துரித உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் நமது உடலில் உண்டாகும் மாறுதல்களை அறிந்துவைத்திருக்கிறோமா? ஒரு மனித உடலுக்குள், பல வகையான நோய்கள் வாடகையின்றி குடியிருப்பதற்கான காரணத்தை ஆராய்ந்தோமா? உடல் உழைப்புமில்லாமல், உணவுத் தேர்வும் சரியாக இல்லாமல், அறியாமையால் நமது உடலைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறோம். மாற்றம் தேவை. கொஞ்சம்கூட யோசிக்காமல், துரித உணவுகளை நம் எண்ணங்களில் இருந்து அழித்தாக வேண்டும். ஒவ்வொருவரும் துரித உணவுகளின் பாதிப்புகளைப் பிறருக்கு எடுத்துக்கூறுவது சமுதாயத்துக்கு செய்யும் நல்ல சேவையாக இருக்கும். தவறான உணவியலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு சமூக சேவை செய்வோம்!

எலி கடித்த உணவுகளைச் சாப்பிடலாமா?

‘சாலையோரத்தில் செயல்படும் தள்ளுவண்டி உணவகங்களில் உணவுகள் தரமாக இருக்காது, சுத்தம் இருக்காது என்பது நம் எண்ணம். அதுமாதிரி கடைகளைப் பரிகாசத்தோடு கடந்து செல்வோம். அதேநேரம், ‘கண்ணாடிகளால் வேயப்பட்ட பெரிய பிராண்டட் ஹோட்டல்கள் என்றால், எல்லாம் சுத்தமாக இருக்கும், தரமாக இருக்கும், உணவுகளைப் பாதுகாப்பாக வைத்துப் பரிமாறுவார்கள்’ என்று நாம் நம்புகிறோம். 
கண்ணாடித் தரைகள், அலங்கார விரிப்புகள், துடைத்து வைத்தாற்போல பளபளக்கும் சுவர்கள், பல வண்ணங்களில் ஜொலிக்கும் விளக்குகள் நமக்கு அப்படி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகின்றன. கொடுப்பதை சாப்பிட்டு, கேட்கிற பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறோம். 
ஆனால் யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது. 
பிரபல செயின் ரெஸ்டாரன்ட் பேக்கரி ஒன்றில், கண்ணாடித் தடுப்புகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் இனிப்புகளை எலி ஒன்று சாவகாசமாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. மிகவும் பரபரப்பான ஓசூர் பேருந்துநிலையத்தில் உள்ள பிரபலமான அந்த ரெஸ்டாரன்ட்டில்தான் இந்த விபரீதம். அந்த ரெஸ்டாரன்டுக்கு இப்போது நகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்திருக்கிறார்கள்.
நாளொன்றுக்குப் பலநூறு பேர் வந்து வணிகம் செய்யும் பேக்கரி அது. வீடியோவைப் பார்த்து மக்கள் மிரண்டு போய்விட்டார்கள். பொதுவாக, நாம் உயர்வாகக் கருதும் பல ரெஸ்டாரன்டுகள், பேக்கரிகளில் வெளித்தோற்றத்துக்கும், உள்ளிருக்கும் நிலைக்கும் சற்றும் தொடர்பு இருக்காது. ஒரு பேக்கரியின் நிலை வெளியில் தெரிந்து விட்டது. பல பேக்கரிகளில் தெரியவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 
‘தள்ளுவண்டிக் கடைகள் முதல் பள்ளி, கல்லூரி விடுதிகள், திரையரங்க கேன்டீன்கள், ரெஸ்டாரன்ட்கள் என உணவு சம்பந்தமான தொழில் புரிவோர், கோவில்களில் அன்னதானம் செய்வோர் அனைவரும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்ட உரிமம் மற்றும் பதிவைக் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். தரமற்ற பொருள்களையோ, தடை செய்யப்பட்ட பொருள்களையோ, தேவையற்ற செயற்கை நிறம் பூசப்பட்ட உணவு பொருள்களையோ விற்பனை செய்யக் கூடாது. சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்’ என்கிறது உணவுப் பாதுகாப்புச் சட்டம். 
இதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த மாவட்ட அளவில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்கள் இருக்கிறார்கள். ஆனால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? 
“உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் தங்கள் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் ஸ்டால்களில் திடீர் ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வுகளின்போது, உணவுப்பொருள்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வண்ணம் சேர்க்கப்பட்டிருக்கிறதா, தண்ணீர், எண்ணெய், சர்க்கரை உள்பட உணவுத் தயாரிக்கப்பயன்படும் பொருள்கள் தரமானவையாக இருக்கின்றனவா, ஸ்டாக் ரூம் எப்படிப் பராமரிக்கப்படுகிறது, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களா, சைவ, அசைவ உணவுகளைத் தனித்தனியாகப் பயன்படுத்துகிறார்களா என எல்லாவற்றையும் ஆய்வு செய்வார்கள்.
பெரும்பாலும் அசைவ உணவகங்களில் முதல் நாள் மிச்சமான சிக்கன், மட்டனை எடுத்து ஃப்ரிட்ஜ் வைத்து, அடுத்தநாள் பிரியாணியில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். அதையும் கண்காணிப்போம். 
உணவுப்பொருள்களில் கலப்படம் செய்தாலோ சுகாதார விதிமுறைகளைச் சரிவர கடைபிடிக்காவிட்டாலோ, அந்த உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்துப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்படும். 
காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வது, உணவுப்பொருள்களில் தரம் குறைவு, பராமரிப்புக் குறைபாடு குறித்து 9444042322 என்ற எண்ணில் மக்கள் புகார் தெரிவிக்கலாம்..” என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தா.
வீடுகளிலும் கூட சில நேரங்களில் தேங்காய் போன்ற பொருள்களை எலிகள் கொறித்துப் போட்டுவிடும். சிலர், எலி கொறித்த இடத்தை மட்டும் வெட்டி வீசிவிட்டு மற்ற பகுதியைப் பயன்படுத்துவார்கள். 
“எலி சாப்பிட்ட உணவுப்பொருட்களைச் சாப்பிடலாமா. அதனால் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா?” 
பொதுநல மருத்துவர் அருணாச்சலத்திடம் கேட்டோம். 
"எலி சாப்பிட்ட உணவுகளை சாப்பிட்டால் வாந்தி, பேதியில் தொடங்கி, எலிக்காய்ச்சல்(Leptospirosis) வரை பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு” என்று பீதி கிளப்புகிறார் அவர். 
“எலியின் சிறுநீரில், லெப்டோஸ்பைரா (Leptospira) என்ற பாக்டீரியா இருக்கிறது. இது, எலியின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலமாகவோ அல்லது கடிப்பதன் மூலமாகவோ பரவுகிறது. ஹோட்டல் உணவுகளையோ, பேக்கரி உணவுகளையோ சாப்பிட்டபின் தொடர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, கண் எரிச்சல், உடல் வலி போன்றவை இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். எலிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை எடுக்காமல் விடும்போது, மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு, கணையப் பாதிப்பு, பித்தப்பை பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்” என்கிறார்.

FSSAI to crack down on misuse of terms like 'fresh', 'natural', 'traditional'

The union health ministry has proposed changes in the law to restrict the use of terms such as 'fresh', 'natural', 'original' and 'traditional' in advertisements for food products.
A draft notification has been prepared by the Food Safety and Security Authority of India (FSSAI), which says among other things that the words 'fresh' or 'freshly' may have no other connotation than the immediacy of the action being described.
For instance, the word 'fresh' can be applied to the products that have not been subjected to any process in any manner, except washed, peeled, chilled, trimmed and put through processing necessary for making it safe for consumption, without altering its basic characteristics.
''We are coming out with this draft notification to stop misleading ads and claims. It had been in the pipeline for some time to ensure people are not fooled in the name of natural and fresh food,'' FSSAI chief executive Pawan Agarwal told The Hindustan Times.
''Our aim is to benefit consumers and promote food that is safe for consumption. There should not be any misleading promotions.''
According to the draft, which has been seen by IANS and other media, a food containing additives or subjected to packaging, storing or any other supply chain processes that control freshness shall not be termed 'freshly stored' or freshly packed'.
It also seeks to restrict the use of the word 'natural' to foods derived from a deemed source like a plant, animal, mineral or micro-organism, to which nothing has been added.
"Compound foods shall not themselves be described directly or by implication as natural but such foods may be described as 'made from natural ingredients'. This will also apply to words such as 'real' and 'genuine', when used in place of 'natural' in such a way as to imply similar benefits. Provided however, claims such as 'natural goodness', 'naturally better' and 'nature's way' shall not be used," says the draft proposal, which is now up for suggestions from stakeholders before it is finalised.
The term 'traditional' can only be used to describe a recipe, fundamental formulation or processing method for a product that has existed for a significant period running over generations.
The term 'original' shall only be used to describe a food which is made to a formulation, the origin of which can be traced and that has remained unchanged over time.
The draft that has five schedules mentioning the restrictions also deals with the health claims of the products. According to the draft the claim that a food has certain nutritional or health attributes shall be scientifically substantiated by validated methods of quantifying the ingredient or substance that is the basis for the claim.
"All disclaimers related to a claim shall appear in the same field of vision. No claim or promotion of sale, supply, use and consumption of articles of foods shall be made using FSSAI logo and license number. Advertisements shall also not undermine the importance of healthy lifestyles," the draft says.

Iron fillings limit in tea is hiked

Food commissioners in all states have now been asked to raise the threshold to 250 mg per kg.
According to the Food Safety and Standards Authority of India (FSSAI), the lack of a reliable method of evaluation is one of the major reasons behind this move.
Hyderabad: The threshold for the permissible amount of iron filings in tea has been increased from 150 mg per kg to 250 mg per kg as the testing and analysis of fillings present in small quantities is a difficult, expensive and a time-consuming process. When the threshold was reduced from 250 mg per kg to 150 mg per kg in 2014, it resulted in several legal cases being filed against wholesalers and retailers, but it became difficult for the authorities to ascertain the exact quantity of iron filings present in tea samples, and so the vendors could not be prosecuted. Food commissioners in all states have now been asked to raise the threshold to 250 mg per kg.
According to the Food Safety and Standards Authority of India (FSSAI), the lack of a reliable method of evaluation is one of the major reasons behind this move. A senior food inspector says, “The upper limit needed to be increased because 150 mg per kg was very difficult to evaluate. 250 mg per kg and above of iron filings can be identified in the laboratory. This will help us conduct inspections at tea factories and wholesale merchants, which is important.”
Nutritionist Dr Janaki Srinath says that iron filings become a reason for concern when consumed in large quantities. “We do not strictly recommend iron tablets for everyone. Those who have iron deficiencies are able to absorb iron from their tea. If the tea is made with milk, the absorption of iron is reduced. “Only those who have too much iron in their bodies need to be careful and reduce their intake of tea. They must not consume too much black tea,” she says.

Excess caffeine may damage your health

Drinking more than five espressos worth of caffeine a day may be damaging to health, according to the European Food Safety Authority.
Heart problems, insomnia and panic attacks were all linked to excess caffeine consumption.
The EFSA said many people were consuming more than the safe level as they were unaware of all the different sources of caffeine.
Safe limits for children and pregnant women are much lower.
Caffeine is often a crutch to help us get through the day.
Tea, coffee, energy drinks, soft drinks and chocolate are all common sources of the drug.
The EFSA was tasked with assessing all the evidence to determine safe consumption levels.
Its report says 400mg a day, in healthy adults, has no health consequences.
This is in line with advice in many countries, including the UK, but the EFSA warns many people drink too much.
Around a third of people in Denmark, 17% in the Netherlands and 14% in Germany consume more than 400mg.
An EFSA spokesman told the BBC: "If you have a bar of dark chocolate at 11:00 and espresso with lunch, a tea at 16:00 and vodka-Red Bull in the evening - that's a lot of caffeine over the day."
Cup of filter coffee - 90mg
Standard energy drink - 80mg
Espresso - 80mg
Cup of tea - 50mg
Can of cola - 40mg
Bar of dark chocolate - 25mg
Bar of milk chocolate - 10mg
Source: EFSA
The main health issues raised were: increased heart rate, higher blood pressure, irregular heartbeat, tremors, nervousness, insomnia and panic attacks.
The limit is 200mg a day in pregnant women due to the impact on the growing foetus.
The report acknowledged there was a limited amount of data on safe levels for children.
The EFSA is recommending 3mg per day for every kilogram the child weighs.
It also found no extra risk as a result of combining caffeine and alcohol.