Jun 27, 2014

கோவில்பட்டி மார்க்கெட்டில் காலாவதி மளிகை பொருட்கள் மிட்டாய்கள் பறிமுதல் சப்&கலெக்டர், அதிகாரிகள் அதிரடி


கோவில்பட்டி, ஜூன் 27:
கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சப்& கலெக்டர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கள் நடத்திய அதிரடி சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், மிட்டாய்கள், முறுக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் நேற்று காலையில் சப்& கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஸ் சந்திர போஸ் முன்னிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ், மாரிச்சாமி, சிவபாலன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சீனிராஜ், சுரேஷ், காஜாமுகைதீன் ஆகியோர் கொண்ட குழுவினர் பழக்கடை, மளிகை கடை, வாழைத்தார் கடை, குளிர்பான கடை மற்றும் மிட்டாய் கடைகள் என ஒவ்வொரு கடையாக சென்று காலாவதியான மற்றும் தயாரிப்பு முகவரி இல்லாமல் பொருட்கள் விற்கப்படுகிறதா? என அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது பெரும்பாலான கடைகளில் காலாவதியான, முகவரி இல்லாமல் குளிர்பானங்கள், மிட்டாய்கள், முறுக்கு மற்றும் மிட்டாய் பாக்கெட்டுகள், மீல்மேக்கர், பச்சை மற்றும் வறுத்த பட்டாணி, வெண்ணிலா மிட்டாய்கள், அழுகிய வாழைப்பழங்கள், சிப்ஸ் மற்றும் அப்பள பாக்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அதிகாரிகள் குழுவினர் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலைய பகுதியில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். இதில் பெரும்பாலான டீக்கடைகளில் திறந்தவெளியில் தூசு படும் வகையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான வடை களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் லாரியில் ஏற்றப்பட்டு நகருக்கு வெளியில் உள்ள காட்டுப்பகுதியில் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மூலம் அழிக்கப்பட்டது.

குற்றாலத்தில் அதிகாரிகள் அதிரடி காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு

தென்காசி, ஜூன் 27:
குற்றாலத்தில் காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை யினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து 31 நிபந்தனைகளை அமல்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருவிகளில் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்க கூடாது, சுற்றுலாபயணிகளுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைக்க வழி செய்யவேண்டும் ஆகியவை இதில் முக்கியமான அம்சங் களாகும்.
உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக குற்றாலத் தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கருணாகரன் மற்றும் அதிகாரிகள் முகைதீன்அப்துல்காதர், கருப்பசாமி, மகேஸ்வரன், மகாராஜன், மோகன்குமார், ராஜநயினார், மாரியப்பன், நாகசுப்பிரமணியன், நாக ராஜன் ஆகியோர் நேற்று சோதனை திடீர் நடத்தினர்.
இதில் விற்பனைக்கு வைத்திருத காலாவதியான குளிர்பானங்கள், சிப்ஸ், தின்பண்டங்கள், பாதாம் பால் பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் டீக் கடை களில் வடை உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெயின் தரத்தையும் சோதனை செய்து தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்து அழிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.
குற்றாலத்தில் காலாவதியான தின்பண்டங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர்.

கலெக்டர் உத்தரவு பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையலுக்கு தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்

நாமக்கல், ஜூன் 27:
பள்ளி, கல்லூரிகளின் விடுதிகளில் தரமான பொருட்களை பயன்படுத்தி சமைக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு அக்கல்லூரிக்கு சென்று விடுதியின் சமையலறை, சேமிப்பு அறை, உணவு பரிமாறும் இடம், குடிநீர்வசதி, கழி வறை வசதி, கழிவுநீர் மற்றும் குப்பைகளை கையாளும் விதம், உணவு தயாரிப்பில் ஈடுபடும் நபர்களின் தன்சுத்தம், உணவு மூலப்பொருளின் தரம் மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு அக்கல்லூரிக்கு சென்று விடுதியின் சமையலறை, சேமிப்பு அறை, உணவு பரிமாறும் இடம், குடிநீர்வசதி, கழி வறை வசதி, கழிவுநீர் மற்றும் குப்பைகளை கையாளும் விதம், உணவு தயாரிப்பில் ஈடுபடும் நபர்களின் தன்சுத்தம், உணவு மூலப்பொருளின் தரம் மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்தது.
அப்போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் அனைத்தையும், நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பல் வேறு வகையான மூலப்பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதற்காக, உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு கூடத்திற்குஅனுப்பப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளின் உணவு விடுதி, சமையலறை, சேமிப்புஅறை, மற்றும் உணவுப்பரிமாறும் இடம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல்கூடம் மற்றும் உணவு உண் ணும் அறைக்கு அருகில் கழிப்பறை இருக்கக்கூடாது. சமையலுக்கு தரமான பொரு ட்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அனைத்து பாத்திரங்களும் சமைக்கும் பணி முடிந்தவுடன், சுடுநீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
சமையல் செய்யும்பொழுது சமையலர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் தலைகவசம், முக கவசம், கையுறை, மேலங்கி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் குடிநீரை 3 மாதத்துக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்து அதன் அறிக்கை மற்றும் அதற்குரிய பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காத பள்ளி மற்றும் கல்லூரிகள் நிர்வாகத்தின்மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விதிமுறைகளை நாமக்கல் மாவட் டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலுள்ள உணவுக்கூடங்கள் அனைத்தும் பின்பற்றவேண் டும். உணவு பாதுகா ப்பு துறை ஆய்வுசெய்து, நடவடிக் கை எடுத்து அதன் விபரத்தை தெரிவிக்கவேண் டும். இவ்வாறு கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு



கூடலூர், ஜூன் 27:
தேனி மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள், ஏற்றுமதிக்கு தரம் வாய்ந்தவையா என்று கேரள மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள மாந்தோப்புகளில் காசா லட்டு, கல்லா மை, செந்தூரம், மல்கோவா, சப்போட்டா, கிளிமூக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான ஒட்டுரக மா வகைகளை, விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் மாம்பழங்களை, வியாபாரிகள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், மாம்பழங்களை சாப்பிடும் போது வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் கேரளாவில், தமிழகத்திலிருந்து வரும் மாம்பழங்களை தடை செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், கேரள மாநிலம் ஆழப்புழையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு துறை உதவி ஆணையாளர் அசரப் அசீன், இடுக்கி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரகுநாத குறுப்பு, சிபு தலைமையில் வந்த அதிகாரிகள் குழு, கூடலூர், பெரியகுளம், போடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாம்பழ தோட்டங்களில் விவசாயிகளை சந்தித்து ஆய்வு செய்தனர். அவர்களிடம் மாம்பழ சாகுபடி, பழுக்க வைத்தல், இருப்பு வைத்தல் ஆகியவை குறித்து கேட்டறிந்தனர். மேலும் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தி விழிப்புணர்வு தகவல்களை கூறினார்கள். இவர்களுடன் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், பாதுகாப்பு அலுவலர்கள் ஜனகர்ஜோதிநாதன், மதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தடை செய்யப்பட்ட பாக்கு வகைகள் பறிமுதல்


கோபி, ஜூன் 27:
கோபி மார் க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பாக்கு வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
கோபி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரண்டு மதுபான பார்கள் உள்ளது. இந்த பார்களில் விற்கப்படும் திண்பண்டங்கள், குடிநீர் பாக்கெட்டுகள், உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் காலாவதியான நிலையிலும் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு புகார்கள் சென்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் கருணாநிதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மனோகரன், கண்ணன், மணி, முருகேசன் ஆகியோர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள இரண்டு பார்களிலும் திடீர் சோ தனை நடத்தினர். அப்போது இரண்டு பார்களும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், அங்கு போடப்பட்டிருந்த டேபிள்கள் மற்றும் உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த டேபிள்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அவற்றை சுத்தம் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் பாரை சுகாதாரமான முறையில் வைத்திருக்க அறிவுரை வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் அங்கு தடை செய்யப்பட்ட பாக்கு வகை கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அங்கு இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாக்கு மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை தீவைத்து அழித்தனர்.

கடைகளில் பதுக்கி விற்பனை செய்த ரூ.1லட்சம் புகையிலை பொருள் அழிப்பு

 

திருப்பூர், ஜூன் 27:
மாநகர் முழுவதும் ரூ.1லட்சம் மதிப்பில் குட்கா மற்றும் போதை புகையிலை பொருட்களை திருப்பூர் உணவு கலப்பட தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு கலப்பட தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறையினர் மாநகர் முழுவதும் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பழைய பஸ்நிலைய பின்புறம், தினசரி மார்க்கெட், கே.எஸ்.சிபள்ளி சாலை, அரிசி கடை வீதி, தாராபுரம் ரோடு போன்ற இடங்களில் மெத்த விற்பனையளர் கடையில் சோதனை செய்தனர். மாவட்ட நியமன அலுவலர் விஜய், உணவு கலப்பட தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறையினர் முருகேஷ், தங்கவேல், காமராஜ், ரகுநாதன், பழனிச்சாமி, கிருஷ்ணசாமி, ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் போதை தரக்கூடிய புகையிலைகளை கடைகளில் வியாபாரிகள் மறைத்து வைத்து விற்பனை செய்து தெரிந்தது. அவற்றை, உணவு கலப்பட தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.1லட்சம் போதை பொருட்களை அழித்தனர். மேலும் காலாவதியான உணவு பொருட்களையும் அப்புறப்படுத்தும் படு அனைத்து வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS



கமிஷனர் உத்தரவுப்படியே சேகோ ஆலைகளுக்கு "சீல்' : உணவு பாதுகாப்பு அலுவலர் மீண்டும் எச்சரிக்கை

சேலம்: "உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படியே, கலப்படம், கெமிக்கல் மிக்ஸிங் செய்யும், சேகோ ஆலைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது' என, சேலம் உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உள்ளிட்டவை தயாரித்து, வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
ஸ்டார்ச் மாவுடன், மக்காச்சோள மாவு கலப்பதாகவும், ஜவ்வரி வெளிர்நிறமாக இருக்க, கெமிக்கல் அதிகம் கலப்பதாகவும், உணவு பாதுகாப்புத்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதனடிப்படையில், விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களை அழைத்து முத்தரப்பு கூட்டம் நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், ஒவ்வொரு சேகோ ஆலை நிர்வாகத்திடமும், கலப்படம் தொடர்பான எச்சரிக்கையும், நடவடிக்கை குறித்தும் விளக்கப்பட்டது. சேகோ ஆலைகளில் மக்காச்சோள மாவு கலப்படம் இருப்பது குறித்து வந்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, அயோத்தியாபட்டணம், ஜாகீர்ரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில், ஆய்வு நடத்தி, இரண்டு ஆலைக்கு சீல் வைத்தார். இதற்கு, சேகோ ஆலை அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரி, ஒரு சில நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்கிறார் என, குற்றம் சாட்டினர்.
இது குறித்து, சேலம் உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது:
வெளிமாநிலங்களுக்கு உணவுப்பொருளை அனுப்ப வேண்டுமெனில், மத்திய அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். உணவுப் பொருளில் கலப்படம் இருந்தால், அது குறித்து நடவடிக்கை எடுக்க எனக்கு, கமிஷனர் அனுமதி வழங்கியுள்ளார். ஏற்கனவே, சேகோ ஆலை அதிபர்களுக்கு, பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கலப்படம் செய்வது தவறு என்றும் எச்சரிக்கை ஏற்படுத்தி உள்ளோம். அவ்வாறு இருந்தும், மக்காச்சோள மாவு கலப்படம் என்பதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
சமீபத்தில், இரண்டு ஆலைக்கு சீல் வைத்தபோது, அங்கு ஆலைக்குரிய எவ்வித பாதுகாப்பு வசதியோ, அங்கீகாரமோ இல்லாத நிலை இருந்தது. உணவு பாதுகாப்பு கமிஷனர், கலெக்டரிடம் அனுமதி பெற்ற பின்னர் தான், அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுவரை, 22 நிறுவனங்களில், சாம்பிள் எடுக்கப்பட்டு, 14 நிறுவனங்கள் கலப்படம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது. கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கிழங்கு வாங்காமல், மக்காச்சோள மாவை கொண்டு, லாபத்தை ஈட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உணவு பாதுகாப்பு சட்ட விதி, 36ன்படி, நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

வடலூர், ஜூன் 27:குறிஞ்சிப்பாடி
பகுதியில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் குறிஞ்சிப்பாடி உணவு பாதுகாப்பு அதிகாரி சுப்பிரமணியன், காட்டுமன்னார்கோவில் உணவு பாதுகாப்பு அதிகாரி கொளஞ்சியப்பன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஓட்டல்கள், பழக்கடைகள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது தரமான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கவும், சமையலறை மற்றும் சாப்பிடும் இடங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், பணியாளர்கள் தூய்மையான ஆடைகளை அணியவும், மருத்துவ தகுதி சான்றிதழ் பெறவும், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம் பழங்களை விற்கவும் சாப்பிடவும் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தரமற்ற கலர் பவுடரை கொண்டு தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள், காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்த உணவு பொருட்களை கொட்டி அழித்தனர்.

DINAMANI & INDIAN EXPRESS NEWS




Scotch imports hit food-safety barrier, consignments held

Indian food inspectors find added colour, caramel and other ingredients during sampling of Scotch bottles, sold as single-ingredient products
Whenever someone asks me if I want water with my scotch, I say I'm thirsty, not dirty," Joe E Lewis, American comedian and singer, once said. Perhaps he was not the only one who preferred Scotch for its unadulterated taste. The liquor now seems to be engulfed in a controversy as it has come under the scanner of Indian food inspectors.
Around 60 shipments of the imported spirit, including European Scotch whisky, are being held by the customs in New Delhi and Mumbai airports for allegedly violating India's labeling requirements, it is learnt.
Under the Indian law, manufacturers are required to list the ingredients of a product on its label unless it is a singleingredient product.
While scotch makers argue that all alcoholic beverages are made of one ingredient, the Food Safety and Standards Authority of India (FSSAI) say scotch whisky consignments were held at the port because sampling found they contain ingredients such as added caramel, colour or some flavour, whereas the same were not listed in their labels.
"Consumers must know what is there in the bottles. Their (Scotch manufacturers) contention is that scotch should be deemed as single ingredient. Our law does not allow that. We have told them that products which contain other ingredients need to list them on the label. Even Codex, which is in line with international standards, does not deem scotch to be a single ingredient product," FSSAI's Chief Executive Officer Dillip Kumar Samantaray told Business Standard.
According to Samantaray, the matter has been reviewed by an independent scientific committee, which has found that scotch contains other ingredients and therefore the manufacturers need to print them on the label on bottles for consumer interest.
Scotch Whisky Association says scotch whisky is recognised in many markets as a 'single ingredient product'.
"While the current import blockage is frustrating for both consumers and industry, with UK and EU support, we are continuing to have useful discussions with the FSSAI aimed at early resolution of the issue so that single ingredient products, such as scotch whisky, can enter the Indian market at the earliest," Rosemary Gallagher, the association's communications manager said in response to an e-mail query.
She said, "Given that the term 'scotch whisky' must appear on every bottle sold, there is no risk of consumer confusion as to what is being bought, and there is no need for such a restriction."
FSSAI officials say the labelling norms are equal for all products entering the market, and labeling requirements will not be relaxed for any supplier. "If they are saying that ingredient labels are not required in many countries, there are also other countries where they are required. Moreover, Indian law requires this and therefore they need to declare it," Samantaray emphasised.
FSSAI has also written to various ministries such as ministry of health and family welfare, ministry of commerce as well as ministry of external affairs, clearing its stand and providing them details of the review by scientific committee and results of the sampling. The regulator has also discussed the matter with various stakeholders, including associations of wine makers and some other food product manufacturers.
"We are very clear in our stance. If a product is non-compliant, we cannot allow it in the market. It can be anything - Scotch, wine or chocolates. Labeling requirements under the law of the land need to be complied with," Samantaray said.
The spat between the regulator and food product importers has been on for quite some time now. At the end of last year, several containers of packaged food products, worth Rs 750 crore to 1,000 crore, carrying imported chocolates, crispies, gourmet cheese, olive oil, noodles, pasta, jams, honey, oats and sauces, etc, were blocked by FSSAI at various ports and airports across the country for allegedly flouting labelling requirements.
However, blocking of Scotch is also seen by many as a fallout of the ongoing tussle between India and the European Union. Recently, EU banned the import of Alphonso mangoes and four other vegetables - egg plant, taro plant, bitter gourd and snake gourd - from India, citing the presence of pests such as fruit flies in them. Reports suggested the Centre has taken up the issue and a European delegation is expected to visit India in September to review the situation.

FSSAI Extends Date of compliance on Logo for packaged foods


Packaged Food
The compliance date of the new guidelines/ clarifications for the FSSAI Logo and License number on the label of the food products has been extended to 1st January 2015 through the notification of FSSAI dated 23rd June 2014. All earlier notifications on the issue of logo and license number on labels have been superseded. Here are some points you must keep in mind about the changes that the regulatory has clarified:
1. You have to keep in mind that the FSSAI logo and license number to be displayed on the label must be in contrast colour to the background so that the logo and license number are easily visible.
Lic. No. XXXXXXXXXXXXXX
2. In case you need to have addresses of multiple units like manufacturer, packer, re-labeller, marketer on the food packet then remember that you have to display the FSSAI logo and license number of the brand owner. The other multiple units will have the license number displayed along with their addresses.
“Lic. No. XXXXXXXXXXXXXX”
3. If you are an importer then according to Food Safety & Standards (Packaging & Labelling) Regulations, 2011 on imported food products, you will have to display FSSAI logo and license number and name and address of the importer on the label. You can either pre-print these on the label or have them on a sticker affixed on the food article, before custom clearance.
4. You will have to make the height of the letters and numerals of the license as prescribed in2.3.3 of the Food Safety & Standards (Packaging and Labelling) Regulations, 2011.
5. You will have to follow regulation 2.6.1 of the FSS (Packaging and Labeling) Regulations 2011for the display of FSSAI license number and logo.
6. Remember that the display of the FSSAI logo on the label of the food product is not a mark of certification but it just signifies that the FBO has a valid license under the Food Safety and Standards Act, 2006.