Jul 21, 2016

போலி ஐ.எஸ்.ஐ., பதிவுடன் விற்பனை: குடிநீர் தயாரிப்பு நிறுவனத்துக்கு 'சீல்'

ஈரோடு: பவானி அருகே, போலியாக ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்றதாக கூறி, குடிநீர் பாட்டில் விற்பனை செய்து வந்த நிறுவனத்தை சீல் வைத்தனர்.
குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற வேண்டும். இந்திய தர நிர்ணய ஆணையம், இச்சான்றை வழங்குகிறது. ஈரோடு மாவட்டம் பவானி, தொட்டிபாளையம் அருகே, 'ஆனந்த் அக்குவா புராடக்ட்' என்ற பெயரில், 500 மில்லி, ஒரு லிட்டர், 5 லிட்டர் பாட்டிலில் குடிநீர் அடைத்து, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்றதாக கூறி விற்பனை செய்து வந்தனர். இவர்கள் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல், போலியாக ஐ.எஸ்.ஐ., பெயரை பயன்படுத்துவதாக, இந்திய தர நிர்ணய ஆணையத்தின், கோவை கிளைக்கு ரகசிய தகவல் வந்தது. கிளை தலைவர் கலைவாணன் உத்தரவுப்படி, குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தை சோதனை செய்தபோது, போலியாக ஐ.எஸ்.ஐ., பெயரை பயன்படுத்தியது தெரியவந்தது. உடனடியாக அங்குள்ள பொருட்களை பறிமுதல் செய்து, நிறுவனத்தை சீல் வைத்தனர்.

No comments:

Post a Comment