Jul 4, 2014

புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது


சேலம், ஜூலை 4:
ஓமலூர் அருகே நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காடையாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளின் அருகில் தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருள்களான பான் மசாலா, புகையிலை, ஹான்ஸ் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவட்டிப்பட்டி எஸ்ஐ பெரியசாமி தலைமையிலான போலீசார் திடீர் ஆய்வு செய்தனர்.
அங்கு புகையிலை பொருள் களை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் (55), நாரா யணன் (37), ராஜூ (34), குணசேகரன் (55), மணிமுத்து (54) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment