Jun 30, 2014

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற குடிநீரை மட்டும் விற்க வேண்டும் பாட்டில் தண்ணீர் தயாரிப்பு சங்க நிர்வாகிகள் தீர்மானம்


சேலம், ஜூன் 30:
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற குடிநீரை மட்டும் விற்பனை செய்வது என பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் அசோசியேசன்(பாட்டில் தண்ணீர் தயாரிப்பாளர்கள்) நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம், நாமக்கல் மாவட்ட பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் அசோசியேசன் டீலர்கள் கலந்தாய்வு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கௌரவதலைவர் சதாசிவம், தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் ஜெயபிரகாஷ், சண்முகம், கதிர்ராசரத்தினம், விஜயன் முன்னிலை வகித்தனர். இதில், புதிய நிர்வாகிகளாக கௌரவ தலைவர் சதாசிவம், தலைவர் அன்பழகன், துணை தலைவர் ராமநாதன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஜெயபிரகாஷ், கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வர், நிரேஷ், கோவிந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டும் குடிநீரை பெற்று விநியோகிக்க வேண்டும் என்றும், ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாத குடிநீரை சப்ளை செய்யக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு துறையில் டீலர்கள் அனைவரும் அடையாள அட்டையை பெற வேண்டும். டீலர்களுக்கு பொதுகாப்பீடு, விபத்து காப்பீடு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறியது.

No comments:

Post a Comment