Jun 21, 2014

அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

அங்கன்வாடி பணியாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் அரும்பாக்கத்தில் உள்ள அங்கன்வாடி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதாசிவம் தலைமை வகித்தார். இதில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், குழந்தைகளுக்குச் செய்யப்படும் உணவு வகைகள் சுத்தமாகவும், தரமாகவும் செய்வது குறித்தும், உணவுப் பொருள்களில் உள்ள சத்துக்கள் வீணாகாத வகையில் சமைப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment