Jun 2, 2014

செய்யாறில் காலாவதியான குளிர்பானம் அழிப்பு

செய்யாறு, மே 31:
செய்யாறில் மாம்பழக்கடை மற்றும் குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி அழுகிய பழங்கள், காலாவதியான குளிர்பானத்தை அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் டாக்டர் அழகுராஜூ உத்தரவின்பேரில் செய்யாறு நகராட்சிக்கு உட்பட்ட மாம்பழம் விற்கும் கடைகள், பழுக்க வைக்கும் குடோன்கள் மற்றும் குளிர்பான கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கே.சீனுவாசன், கே.எஸ்.பிரசாத், சி.நாகேஸ்வரன் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.
அதில் கார் பைட் கல் வைத்து பழுக்க வைத்த பழங்கள் ஏதும் சிக்கவில்லை. அழுகிய பழங்கள் சுமார் ஒரு டன் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
மேலும் குளிர்பானக் கடைகளில் காலாவதியான கூல்டிரிங்ஸ் பாட்டில்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

No comments:

Post a Comment