May 28, 2014

கோயம்பேடு பஸ் நிலையத்தில் தரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல்


அண்ணாநகர், மே 28:
கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில், பயணிகளின் வசதிக்காக, ஏராளமான கடைகள், உணவகங்கள் உள்ளன. இந்த கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சதாசிவம், மணிமாறன், கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம், இங்குள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, 24 கடைகளில், காலாவதியான குளிர்பானங்கள், முறுக்கு, பிஸ்கட் மற்றும் வாட்டர் பாக்கெட் உள்ளிட்டவை விற்பது தெரிந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10,000 ஆகும். மேலும், கடைக்காரர்களிடம் காலாவதியான பொருட்களை விற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்களை குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.


No comments:

Post a Comment