Jan 21, 2014

உணவுப் பொருள் வணிகர் பெயரை பதிவு செய்துகொள்ள வலியுறுத்தல்

பாடாலூர், ஜன. 21: 
ஆலத்தூர் வட்டாரத்தில் உணவுப்பொருள் வியாபாரம் செய்யும் வணிகர்கள் அனைவரும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் தங்கள் பெயர் களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ஆலத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுபவர்கள், மொத்த வியாபாரிகள், விநியோகிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் பிப்ரவரி 4ம் தேதிக் குள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். 
தங்கள் வியாபார நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் ரேஷன் கார்டு மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் ரூ.100 பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வியாபா ரம் செய்யும் நிறுவனங்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தி அதற் கான உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அதனை பதிவு செய்து கொள்ள ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம், கொளக்காநத்தம், கூத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தையோ அல�லது ஆலத்தூர் தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் ரவியை 99449&15341 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்

No comments:

Post a Comment