Jan 21, 2014

உணவு வியாபார நிறுவனங்கள் பதிவு செய்ய பிப்.4 கடைசி நாள்

மதுரை, ஜன. 21:
மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தையும் வரும் பிப்.4ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். 
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,� மாவட்டத்தில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை, டீக்கடை, சிற்றுண்டி நிலையம், தெருவோர கடைகள், தள்ளுவண்டி, ஓட்டல்கள், உணவு பொருள் சேமித்து வைப்பவர்கள், மொத்த வியாபாரிகள் பதிவு செய்ய வேண்டும். 
மேலும் சமையல் பாத்திர செட் வைத்திருப்பவர்கள், கோயில் மற்றும் பொது இடங்களில் அன்னதானம் வழங்குபவர்கள், ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி, பழம் மற்றும் காய்கறி வியாபாரிகள் உள்பட அனைவரும் உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் படி தங்களது வணிகத்தை பதிவு செய்து கட்டாயம் உரிமம் பெற வேண்டும். 
பதிவு, உரிமம் பெறுபவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் www.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் ரேஷன் கார்டு நகல், வங்கியில் ரூ.100 செலுத்தியதற்கான உண்மை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தொழில் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பத்தை மாவட்ட நியமன அலுவலர் அல்லது வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் வழங்க வேண்டும். ஏற்கனவே பதிவு உரிமம் பெற்றவர்கள் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு பிப்.4 ஆகும். 
காலக்கெடு நீட்டிப்பு இல்லை. தவறுபவர்கள் அபராத தொகையுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0452&2640036, செல்போன் 98423 03625 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவலை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment