Jan 21, 2014

கொளத்தூரில் போலி டீத்தூள் பறிமுதல்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உணவுப் பாதுகாப்பு துறையினர் நடத்திய ஆய்வில் 28 கிலோ போலி டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டூரை அடுத்த கொளத்தூரில் சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், மாரியப்பன், சிவானந்தம் ஆகியோர் திங்கள்கிழமை தேநீர்க் கடைகள், பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் ஆய்வு நடத்தினர். 
அப்போது, தேநீர்க் கடைகளில் இருந்து 28 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்டிக் கடைகள், பேக்கரிகளில் இருந்து காலாவதியான ரொட்டிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மளிகைக் கடைகளில் 500 பொட்டலம் புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

No comments:

Post a Comment