Dec 9, 2013

நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு விருது

கிருஷ்ணகிரி, டிச.9: 
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டது. 
கிருஷ்ணகிரியில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், மக்கள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. சமூக நுகர்வோர் நலப்பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சக்தி மனோகரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சதீஸ் வரவேற்றார். 
கூட்டத்தில் சிறந்த முறையில் அரசு பணியாற்றி வரும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி, தர்மபுரி உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன், தர்மபுரி கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் துளசிராமன், நீதித்துறை ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜாமணி, ராஜேஷ் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. 
இந்த விருதை, இந்திய அரசின் உணவுக்கழக உறுப்பினரும், நுகர்வோர் சங்க தேசிய செயலாளருமான சாரதி வழங்கி வாழ்த்தி பேசினார்.

No comments:

Post a Comment