Dec 9, 2013

அதிகரித்து வரும் பாஸ்ட்புட் கலாச்சாரத்தால் நோய் தாக்கும் அபாயம்



சிவகங்கை, டிச. 9: 
அதிகரித்து வரும் பாஸ்ட்புட்(ஜங்க் புட்) உணவு கலாச்சாரத்தால் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை, இளையான் குடி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்க ளை குறிவைத்தே இது போன்ற பாஸ்ட் புட் கடை கள் திறக்கப்பட்டுள்ளன. 
சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே இருந்து வந்த இக்கடைகள் கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்திலும் ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. மாவ ட்டம் முழுவதும் பாஸ்ட் புட் ஓட்டல்கள் தவிர, சுகாதாரமற்ற நிலையில் உள்ள சாலையோர கடை களின் எண்ணிக்கை மட்டும் 500க்கும் மேல் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பாஸ்ட்புட் உணவில் சுவை மற்றும் வாசனைக்காக பல கெமிக்கல் கலந்த பொரு ட்களை உணவோடு கலக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி சிறு வயது குழந்தைகளும் இதன் சுவைக்கு மயங்கி இந்த உணவை தொ டர்ந்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
தற்போது அதிகமாகி வரும் நோய் தாக்குதலுக்கு உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாஸ்ட்புட் உணவால் பல்வேறு நோயை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இது குறித்து அரசு சுகாதாரத்துறை இயக்குனர் ஒருவர் கூறுகையில், 
நம்முடைய பாரம்பரிய உணவு வகையில் உள்ளதை போன்று ஆயிரக்கணக்கான மடங்கு கலோரி பாஸ்ட்புட் உணவு வகைகளில் உள்ளது. இந்த உணவில் கலக்கப்படும் பொருட்களினால் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடும் போது மாரடைப்பு, ரத்த அழுத்தம், அல்சர், டயரியா, ஆண்மைக்குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும். நூடுல்ஸில் வழு வழுப்பு தன்மைக்காக சேர்க்கப்படும் மெழுகு பொருள் எளிதில் ஜீரணமாகாது. இதனால் குடல், இரைப்பை, உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்புள்ளது. இந்த வகை உணவை சாப்பிட்டால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை, குழந்தை பேறு பிரச்சினை மற்றும் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும். எனவே இந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment