Nov 12, 2013

அண்ணா நகரில் 135 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

அண்ணா நகர், நவ.12:
உடலுக்கு கேடு விளைவிக்கும் மெல்லும் வகையிலான புகையிலை பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகமாக விற்கப்படுவதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அதிகாரிகள் சதாசிவம், மணிமாறன், கஸ்தூரி உள்ளிட்டோர் அண்ணா நகர் 12 வது மெயின்ரோடு, 13 வது மெயின்ரோடு, 2 வது அவென்யூ மற்றும் நூறடி சாலை பகுதிகளிலும், வில்லிவாக்கம் எம்.டி.எச் ரோடு பகுதியிலும் சோதனை நடத்தினர். அங்குள்ள கடைகளில் 135 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment