Jun 2, 2018

ரீ - பேக்கிங் ஆயில் மில்லுக்கு 'சீல்': 936 லிட்டர் எண்ணெய் பறிமுதல்

சேலம்: கலப்பட சமையல் எண்ணெய், 936 லிட்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், மில்லுக்கு 'சீல்' வைத்தனர்.
சேலம், சித்தர்கோவில் பிரதான சாலை, திருமலைகிரியில், ஆனந்த் எண்டர்பிரைசஸ் எனும் ரீ - பேக்கிங் ஆயில் மில் உள்ளது. அங்கு, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள், நேற்று முன்தினம், சோதனை மேற்கொண்டனர். அப்போது, மில்லுக்கு உரிமமின்றி, அக்மார்க் தரச்சான்று பெறாமல், பாமாயில் கலந்த சமையல் எண்ணெய் பேக்கிங் செய்து, விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த, 936 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 6,300 ரூபாய். தொடர்ந்து, மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது. உரிமையாளர் சகுந்தலாவிடம் விசாரித்த பின், அவர்கள் மீது, வழக்குப்பதிந்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாரியப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment