Sep 11, 2015

சத்துணவையும் கண்காணிக்குது உணவு பாதுகாப்புத்துறை

திண்டுக்கல்:பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துமாவு போன்றவற்றை கண்காணிக்க, உணவு பாதுகாப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.ஓட்டல், உணவு நிறுவனங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி கண்காணிக்கின்றனர். பள்ளி, அங்கன்வாடி மையம், மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை அந்தந்த துறை அதிகாரிகளே ஆய்வு செய்கின்றனர்.
இருந்தபோதும் தரமற்ற உணவு வழங்குவதாக புகார்கள் எழுகின்றன. இதையடுத்து பள்ளி, அங்கன்வாடி மையம், விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துணவு, சத்துமாவு போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சாம்இளங்கோ கூறுகையில், “பள்ளி, அங்கன்வாடி மையம், விடுதிகளில் விரைவில் ஆய்வு நடத்த உள்ளோம்.
இந்த அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment