Dec 23, 2014

முட்புதரில் பதுக்கிய 105 பான் மசாலா மூடைகள் பறிமுதல் திருமங்கலம் அருகே பரபரப்பு

 
திருமங்கலம், டிச. 23:
திருமங்கலம் அருகே ரிங்ரோட்டில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 105 மூடை பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருமங்கலம் அருகே கப்பலூரில் இருந்து விமானநிலையம் செல்லும் ரிங்ரோட்டில், சாலையோர முட்புதரில் மூடைகள் கிடப்பதாக கப்பலூர் விஏஓ மகாலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விஏஓ மகாலிங்கம், திருமங்கலம் தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முட்புதர்களில் கிடந்த மூடை களை கைப்பற்றி திறந்து பார்த்தனர்.
அங்கு கிடந்த 105 மூடைகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட் கா பாக்கெட்டுகள் இருந் தன. இவற்றின் மதிப்பு சுமா ர் ரூ.5 லட்சம். அனைத்து மூடைகளையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து திருமங்கலம் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தாசில்தார் பாலசுப்பிரமணியன் கூறுகையில், தடை செய்யப்பட்ட காலாவதியான பான் மசாலா, குட்கா பாக்கெட்டுகளை வீசி சென்றது யார் என விசாரணை நடத்தி வருகி றோம். திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கடைகளில் இவை விற்பனை செய்யப்படுகின்றனவா எனவும் சோதனை நடத்திவருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment