Oct 6, 2014

காலாவதியான குளிர்பான விற்பனை தடுக்க வேண்டும் அதிகாரிகள் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை


கரூர், அக்.6:
காலாவதியான குளிர்பானம், குடிநீர்பாக்கெட் விற்பனையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோடைகாலம் முடிந் தும் வெயில் கரூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கிறது. கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தினாலும் காற்று வீசிவந்ததால் வெப்பத்தின் தாக்கம் தெரியவில்லை. பகலில் அனல் பறக்கும் வெயில் அடிக்கிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளிர்பானங்களை வாங்கி பருகுகின்றனர். குளிர்பானங்கள் விற்பனையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
அவ்வாறு விற்கப்படும் குளிர்பானங்களில் காலாவதியான குளிர்பானங்களையும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். குளிர்பான பாட்டலில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பல கடைகளில் காலாவதி தேதி முடிந்த பின்னரும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் மோர், ரஸ்னா, லெமன் ஜூஸ் போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான பாக்கெட்டுகளில் எந்த கம்பெனி என தெரி யாத அளவுக்கு உள்ளது. ஏதோ ஒருபெயரில் இந்த பாக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர்.
புறநகர்பகுதிகளில் முறையான தயாரிப்பு இல்லாமல் இருக்கிறது. சில கம்பெனி குளிர்பானங்களிலும் காலாவதி தேதி முடிந்த பின்னரும் விற் பனை செய்கின்றனர். கிராம மக்களுக்கு இதுபற்றி தெரியாது என்பதால் அவர்கள் வாங்கி குடிக்கின்றனர். டாஸ்மாக் பார்களில் இதுபற்றி கேட்கவே வேண் டாம். அவர்கள் தருவதைத் தான் வாங்கி குடிமகன்கள் அருந்தும் கட்டாயத்தில் உள்ளனர். பார்களில்தான் இவைகள் அதிகளவில் விற்கப்படுகின்றன.
சுகாதாரத்துறை அதிகாரிகள் அடிக்கடி கடை களில் ஆய்வு நடத்தி காலாவதியான குளிர்பானங் களை பறிமுதல் செய்து அழிக்கவேண்டும். முன்பெல்லாம் அடிக்கடி இதுபோன்ற ஆய்வுகளை நடத்தும் அதிகாரிகள் தற்போது அதுபோன்ற சோதனைகள் எதையும் மேற்கொள்வதில்லை.
குளிர்பானத்திற்கு அடுத்தபடியாக, குடிநீர்பாட்டல்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகிறது. கடைகளில் புதிது புதிதாக பல பெயர்களில் குடிநீர் பாட்டல்கள் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் கூடும் இடங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் குடிநீர் பாக்கெட்டுகளை விநியோகம் செய்கின்றனர். குடிநீர்பாக்கெட்டுகள் மூட்டைகளில் அடைக்கப்பட்டு கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது. இதேபோன்று கடைகளிலும் குடிநீர் மூட்டைகளில் இருந்து பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. சில கடை களில் இந்த குடிநீர் பாக்கெட்டுகளை பிரிட்ஜில் வைத்து குளிர்வித்து விற்பனை செய்கின்றனர்.
பெரும்பாலான குடிநீர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளில் உற்பத்தி தேதி இருப்பதில்லை. காலாவதியாகும் தேதியும் இல்லை. இதனால் குடிநீர் எப்போது தயாரிக்கப்பட்டது என்பது போன்ற விழிப்பணர்வு இல்லாத நிலையில் பொதுமக்கள் இவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை விற்பனை செய்வதை தடுத்து பறிமுதல்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண் டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment