Oct 10, 2014

அதிகாரிகள் அதிரடி ஆத்தூர் அருகே சோதனைஅதிமுக பிரமுகர் ஆலையில் ஜவ்வரிசி உற்பத்திக்கு தடை


ஆத்தூர், அக்.10:
ஆத்தூர் அருகே அதிமுக பிரமுகர் ஆலையில் ஜவ்வரிசி உற்பத்திக்கு அதிகாரிகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் அதிமுக பிரமுகர் பச்சமுத்து என்பவருக்கு சொந் தமான சோகோ ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனு ராதா தலைமையிலான அலுவலர்கள் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு ரசாயனம் கலந்த ஜவ்வரிசி மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு தடை சட்டம் 55ன் கீழ் சேகோ ஆலையின் உரிமையாளர்கள் பச்சமுத்துவுக்கு ஜவ்வரிசி தயாரிப்பதை நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment