Oct 10, 2014

அம்பை பகுதிகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்


அம்பை, அக். 9:
அம்பை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் ஒன்றியப்பகுதிகளான மன்னார்கோவில், வாகைக்குளம், காக்கநல்லூர் போன்ற பகுதிகளில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் குமார்ஜெயந்த் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி கருணாகரன் ஆகியோர் அறிவுரையின்பேரில் அம்பை உணவுப் பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் சோதனை யில் ஈடுபட்டார்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக், புகையிலை மற்றும் தயாரிப்புத் தொடர்பான விவரங் கள் இல்லாத குளிர்பான பாக்கெட்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தார்.
இதுபோல் மீண்டும் விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத் தார்.

No comments:

Post a Comment