Sep 11, 2014

பேக்கரியில் கலப்பட டீ தூள், புகையிலை பொருள் பறிமுதல்


திருப்பூர், செப். 10:மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவின் பேரில், நியமன அலுவலர் விஜய் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முருகேசன், தங்கவேல் ஆகியோர்நேற்றுகுமரன் ரோடு, காதர்பேட்டை, ஓம் சத்தி கோயில் வீதி, அவிநாசி ரோடு ஆகிய பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் மொத்த விற்பனைகடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஓம் சக்தி கோயில் வீதியில் உள்ள ஒரு பேக்கரியில் சோதனை மேற்கொண்டனர்.அந்த பேக்கரியில் கலப்பட டீ தூள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில், சோதனை மேற்கொண்டு வருகிறோம்.திருப்பூர் மாவட்டம் முழுவதும் பேக்கரி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் சோதனை மேற்கொள்கிறோம்.
இதுவரை ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். தற்போது ஒரு பேக்கரியில் முறைகேடாக கலப்பட டீ தூள் கலந்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றனர்.

No comments:

Post a Comment