Sep 16, 2014

வானூர் பகுதிகளில் 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்


வானூர், செப். 16:வானூர் பகுதிகளில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வானூர் தாலுகா பட்டானூர், திருச்சிற்றம்பலம், வானூர் உள்ளிட்ட பகுதி களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆறுமுகம் தலைமையில் மளிகை கடை, பெட்டிக்கடை, மருந்தகம் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. வட்டார உணவு பாதுகாப்பு அதிகா ரிகள் வானூர் சந்திரசேகரன், காணை சமரேசன், திருவெண்ணை நல்லூர் முருகன், முகையூர் கணேசன், திண்டிவனம் பாரதி, ஒலக்கூர் மோகன், செஞ்சி கதிரவன் ஆகியோர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
 

No comments:

Post a Comment