Aug 4, 2014

அதிகாரிகள் அறிவுறுத்தல் பாக்கெட் உணவுகளுக்கு காலாவதி தேதி அவசியம்


காரைக்கால், ஆக.4:
பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் உணவுகளில், நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள்கள் கட்டாயம் அச்சிட வேண்டும் என, புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறைக்கு வந்த புகாரையடுத்து, காரைக்கால் கோட்டுச்சேரி பகுதிகளில் இயங்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கண்டறிந்து பறிமுதல் செய்தார். முறையற்ற விற்பனையில் ஈடுபட்ட மளிகை கடை மற்றும் பெட்டிகடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவும், இனி இதுபோன்ற முறையற்ற விற்பனையில் ஈடுபட்டால், 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை, அபராதமாக ரூ.5 லட்சம் வரை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் உணவுகளில், நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள்கள் கட்டாயம் அச்சிட வேண்டும் என அறிவுறுத்திய ரவிச்சந்திரன், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி இல்லாத பாக்கெட் உணவு வகைகளை பறிமுதல் செய்தார்.

No comments:

Post a Comment