Aug 4, 2014

உணவு பாதுகாப்பு உரிமம் இன்றுடன் முடிகிறது 'கெடு' :கால நீட்டிப்பு தருவதில் மத்திய அரசு மவுனம்


சென்னை :உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி, வணிகர்கள் உரிமம் பெற மத்திய அரசு விதித்த கெடு, இன்றுடன் முடிகிறது. வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விதிகளில் காலத்திற்கேற்ற திருத்தம், கால நீட்டிப்பு குறித்து மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.
நுகர்வோருக்கு கிடைக்கும் உணவுப் பொருட்கள், தரமானதாகக் கிடைக்க, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ஐ, முந்தைய மத்திய அரசு கொண்டு வந்தது. விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 2011ல் 
அமலானது.இதன்படி, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்குள் வர்த்தகம் செய்வோர், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, உணவு பாதுகாப்பு துறையில் பதிவுச்சான்று பெற வேண்டும். அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர், 2,000 ரூபாய் செலுத்தி, உரிமம் பெற வேண்டும். இதை, ஆண்டு தோறும் புதுப்பிக்க வேண்டும்.
சான்று, உரிமம் பெறாவிட்டால், ஒரு லட்சம் முதல், 15 லட்சம் ரூபாய் வரை அபராதம், சிறைத் தண்டனை தரும் வகையில், சட்ட விதிகள் கடுமையாக உள்ளன. இதற்கு, வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவு, உரிமம் பெற, மூன்று முறை அவகாசம் தரப்பட்டது. கடந்த ஆண்டு, மீண்டும் ஒரு முறை, அவகாசம் வழங்க பட்டது. அந்த அவகாசம், 
இன்றுடன் முடிகிறது.அரசின் கணக்குப்படி, தமிழகத்தில், 5.5 லட்சம் வணிகர்கள் உள்ளனர். இதுவரை, 40 சதவீதம் பேர் கூட பதிவு செய்யவில்லை.
33 ஆயிரம் பேர் உரிமம் பெற்றிருந்தாலும், யாரும் புதுப்பிக்கவில்லை.'இந்த திட்டத்தில் காலத்திற்கேற்ப திருத்தம் செய்ய வேண்டும்; அதுவரை, சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. பதிவு, உரிமம் பெற மேலும் அவகாசம் தர வேண்டும்' என, வணிகர்கள், மத்திய அரசை வலியுறுத்தி 
வருகின்றனர்.மோடி தலைமையிலான, மத்திய அரசும், 'இதில் கவனம் செலுத்தப்படும்' என, அறிவித்தது. ஆனாலும், உரிமம், பதிவுக்கு காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில், இதுவரை கால நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல், மத்திய அரசு மவுனம் சாதித்து வருவது, வியாபாரிகளை கவலை அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கச் செயலர் வேல்சங்கர் கூறுகையில், ''இந்த பிரச்னை குறித்து, கடந்த வாரம் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்து, உணவு பாதுகாப்பு சட்டத்தில் காலத்திற்கே திருத்தம் வேண்டும். அதுவரை, வணிகர்களுக்கு அவகாசம் தர வேண்டும் என, வலியுறுத்தினோம். பா.ஜ., தலைவர்களையும் சந்தித்து பேசினோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment