Jul 25, 2014

காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு



வந்தவாசி, ஜூலை 25:
வந்தவாசி நகரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்த காலாவதியான ரூ.65 ஆயிரம் பொருட்களை தீவைத்து அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன டாக்டர் அழகுராஜ் தலைமையில் அலுவலர்கள் ரவி, சீனிவாசன், ரவிச்சந்திரன், கோட்டீஸ்வரன், நாகேஷ் வரன், சுப்பிரமணி, ஏகாம்பரம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் வந்தவாசி பஜார்வீதி, பழைய பஸ்நிலையம், தேரடி, காந்திசாலை, கோட்டைமூலை, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல், பேக்கரி, இனிப்பகம், ஜெனரல் ஸ்டோர், மளிகை கடை, சூப்பர்மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது கடைகளில் இருந்த ரூ.65 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பொருட்களை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள முள்புதரிடம் தீவைத்து அழித்தனர்.

No comments:

Post a Comment