Jul 25, 2014

காலாவதியான பொருள்: அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை: வந்தவாசியில், 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான பொருட்களை, அதிகாரிகள் கண்டுபிடித்து, அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன டாக்டர் அழகுராஜ் தலைமையில், அலுவலர்கள் ரவி, சீனிவாசன், ரவிசந்திரன், கோட்டீஸ்வரன், நாகேஸ்வரன், சுப்பிரமணி, ஏகாம்பரம் ஆகியோர் கொண்ட குழுவினர், காலாவதியான பொருட்கள் விற்பனை குறித்து, ஆய்வில் ஈடுபட்டனர். வந்தவாசி பஜார் வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், தேரடி காந்தி சாலை, கோட்டை மூலை, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல், பேக்கரி, இனிப்பகம், ஜெனரல் ஸ்டோர், மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, கடைகளில் இருந்த, 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்து, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தீ வைத்து அழித்தனர்.

No comments:

Post a Comment