Jul 2, 2014

காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்


மணமேல்குடி, ஜூலை 2:
மணமேல்குடி அம்மாபட்டிணம், கிருஷ்ணாஜிப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையொட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த திண்பண்டங்கள், பான்மசாலா, பாலிதீன் கேரிபேக் கப்புகள், கூல்ட்ரிங்ஸ் மற்றும் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஊராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி அவைகள் அழிக்கப்பட்டன.

No comments:

Post a Comment