Jul 1, 2014

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்



ராயபுரம், ஜூலை 1:
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ராயபுரம் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் இளங்கோவன், ஜபராஜ், சிவஇளங்கோ, ஜெயகோபால் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு தண்ணீரால் ஏற்படும் நோய், பாதுகாப்பான உணவை எடுத்து கொள்வது எப்படி, ஆரோக்கியமான வாழ்வுக்கு கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, உணவு பாதுகாப்பு துறை சார்பில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment