Sep 23, 2013

பாப்பிரெட்டிப்பட்டியில் காலாவதியான தண்ணீர் கேன்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

பாப்பிரெட்டிப்பட்டி ,செப். 21:
பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பொம்மிடி பகுதிகளில் தரமற்ற உணவு பண்டங்கள் விற்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து அங்குள்ள கடைகளில் தர்மபுரி மாவட்ட நியமன அலுவலர் தினேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, பான்பாரக் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் காலாவதியான தண்ணீர் கேன்களையும் விற்பனை செய்தது கண் டுபிடிக் கப்பட்டது. உடனே, அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்

No comments:

Post a Comment