Sep 23, 2013

மதிகோன்பாளையம் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி பான்பராக், ஹான்ஸ் பறிமுதல்

தர்மபுரி, செப்.21:
தர்மபுரி மதிகோன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மளிகை கடை, டிபன் கடை, ஓட்டல் சில்லி சிக்கன் உள்ளிட்ட கடைகளில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் தலைமையில் அலுவலர்கள் நாகராஜன், நந்தகோபால், குமணன், சிவமணி ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். பான்பராக், ஹான்ஸ், போதைதரும் புகையிலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாத குடிநீர், லேபிள் இல்லாத வர்க்கி, பன் உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து அளித்தனர்.
இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம். லேபிள் இல்லாத குடிநீரை தரையில் கொட்டினர். இதன் பின்னர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
இல்லையென்றால் பறிமுதல் செய்து அழிக்கப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment