Mar 28, 2016

டீ கடை பெஞ்ச் - கம்பெனிக்கு 'சீல்' வைத்த 'கட்டிங்' அதிகாரி

'சென்னை அண்ணாநகர் ஏரியாவுல, டீ துாள் தயாரிக்கிற கம்பெனி இருக்கு... அங்க, டீ துாள்ல சாயம் அதிகமாக கலக்குறதா, மாநகராட்சிக்கு புகார் வந்திருக்கு... வழக்கமா இப்படி புகார்கள் வந்தா, அதை உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பிடுவாவ வே...
''ஆனா, டீ துாள் கம்பெனி மேல வந்த புகாரை வச்சிக்கிட்டு, சுகாதார துறை பெண் அதிகாரி, 'கட்டிங்' கேட்டிருக்காங்க... அவங்க கேட்ட தொகை கிடைக்காததால, நள்ளிரவுல
அந்த கம்பெனியில, 'ரெய்டு' நடத்தி, 'சீல்' வச்சிட்டாங்க...''அங்க இருந்து,
டன் கணக்குல டீ துாளை பறிமுதல் செஞ்சு, அம்மா உணவகத்துல வச்சிருக்காங்க...'' என்ற அண்ணாச்சி, ''நேத்து, 'டிவி'யில, 'சரஸ்வதி சபதம்' படம் போட்டாங்களே பார்த்தீயளா...?'' எனக் கேட்க, நண்பர்கள் பேச்சு, சினிமா பக்கம் திரும்பியது.

No comments:

Post a Comment