Nov 2, 2015

சங்க தலைவர் மீது புகார் விவகாரம் சேலம் உள்பட 4 மாவட்டங்களில் சேகோ ஆலைகள் ஸ்டிரைக் வாபஸ் டிஆர்ஓ பேச்சுவார்த்தையில் உடன்பாடு


ஆத் தூர், நவ.2:
ஆத் தூ ரில் சேகோ சங்க தலை வர் மீது அளிக் கப் பட்ட கொலை மிரட்டல் புகாரை வாபஸ் பெறக் கோரி, சேலம் உள் பட 4 மாவட்டங் களில் சேகோ ஆலை உரி மை யா ளர் கள் ஸ்டி ரைக் கில் ஈடு பட்ட னர். டிஆர்ஓ தலை மை யி லான பேச் சு வார்த் தை யில் உடன் பாடு ஏற் பட்ட தால், ஸ்டி ரைக் வாபஸ் பெறப் பட்டது.
சேலம், தர் ம புரி, நாமக் கல், விழுப் பு ரம் உள் ளிட்ட 4 மாவட்டங் களில் 500க்கும் மேற் பட்ட சேகோ ஆலை கள் உள் ளன. ஜவ் வ ரிசி தயா ரிப் பில் ரசா ய னம் கலப் ப தாக புகார் எழுந் த தால், சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி அனு ராதா, அவ் வப் போது சேகோ ஆலை களில் சோதனை நடத்தி வரு கி றார்.
கடந்த மாதம் 29ம் தேதி, ஆத் தூர் வளை ய மா தேவி பகு தி யில் ஆத் தூர் வட்ட ேசகோ, ஜவ் வ ரிசி ஆலை உரி மை யா ளர் கள் நலச் சங் கத் தின் தலை வர் துரை சா மிக்கு சொந் த மான ஆலை யில், அனு ராதா தலை மை யி லான அதி கா ரி கள் சோதனை நடத்த சென் ற னர். அப் போது அதி கா ரி களை சிறை பிடித்த ஆலை உரி மை யா ளர் கள், பின் னர் விடு வித் த னர்.
இந் நி லை யில் ஆய் வுக்கு சென்ற அதி கா ரி களுக்கு, துரை சாமி மற் றும் சேகோ ஆலை உரி மை யா ளர் கள் சிலர் கொலை மிரட்டல் விடுத் த தாக, ஆத் தூர் டிஎஸ்பி காசி நா த னி டம், உணவு பாது காப்பு அதி காரி அனு ராதா புகார் அளித் தார். இதை ய டுத்து சேகோ ஆலை உரி மை யா ளர் களும் டிஎஸ் பி யி டம் மனு ஒன்றை அளித் த னர். அதில், சோதனை என்ற பெய ரில் அதி காரி அனு ராதா தங் களை அச் சு றுத் து வ தா க வும், கொலை மிரட்டல் விடுத் த தாக பொய் புகார் அளித் த தா க வும் கூறி னர்.
மேலும், புகாரை வாபஸ் பெற வேண் டும். சோதனை என் கிற பெய ரில் அச் சு றுத் தக் கூ டாது என்ற கோரிக் கை களை வலி யு றுத்தி, நேற்று முன் தி னம் நள் ளி ரவு முதல் சேகோ ஆலை உரி மை யா ளர் கள் ஸ்டி ரைக் கில் ஈடு பட்ட னர். மர வள்ளி கிழங்கை விவ சா யி களி டம் இருந்து கொள் மு தல் செய்ய மாட்டோம் என வும் சேகோ ஆலை உரி மை யா ளர் கள் அறி வித் த னர்.
இதை தொடர்ந்து சேலம், நாமக் கல், தர் ம புரி, விழுப் பு ரம் ஆகிய 4 மாவட்டங் களில் 500 சேகோ ஆலை களில், நள் ளி ரவு முதல் மர வள்ளி கிழங்கு அரவை நிறுத் தப் பட்டது. முன் ன தாக நள் ளி ரவு ஒரு மணி ய ள வில், 500 டன் மர வள்ளி கிழங் கு டன் 50 லாரி களை ஆத் தூர் ஆர் டிஓ அலு வ ல கத் தில் கொண்டு வந்து நிறுத் தி னர். இத னி டையே சேலம் டிஆர்ஓ செல் வ ராஜ், ஆலை உரி மை யா ளர் கள் மற் றும் அரசு அதி கா ரி களி டம், ஆத் தூர் ஆர் டிஓ அலு வ ல கத் தில் பேச் சு வார்த்தை நடத் தி னார்.
அப் போது, ஆலை உரி மை யா ளர் கள் கூறு கை யில் உயர் நீ தி மன்ற உத் த ர வின் படி, கலப் ப டம் இருப் ப தாக கூறப் ப டும் ஆலை யில், வணிக வரித் துறை அலு வ லர், சேகோ சர்வ் அலு வ லர், உணவு பாது காப் புத் துறை அலு வ லர் ஆகி யோர் குழு வாக வந்து தான் ஆய்வு நடத்த வேண் டும் என கோரிக்கை விடுத் த னர். மேலும் சங்க தலை வர் மீது கொடுக் கப் பட்ட புகாரை வாபஸ் பெறும் படி வலி யு றுத் தி னர்.
இதை ய டுத்து பேசிய டிஆர்ஓ செல் வ ராஜ், தொழில் துறை ஆணை யர் வழி காட்டு த லின் பேரில், சேகோ ஆலை யில் ஆய்வு நடத் தப் ப டும். சங்க தலை வர் மீது ஆத் தூர் போலீ சில் அளிக் கப் பட்ட புகாரை கைவிட நட வ டிக்கை எடுக் கப் ப டும் என தெரி வித் தார். இதனை ஏற்று கொண்ட ஆலை உரி மை யா ளர் கள், மாலை 4 மணி ய ள வில் ஸ்டி ரைக்கை வாபஸ் பெறு வ தாக அறி வித் த னர். பின் னர், ஆர் டிஓ அலு வ ல கம் முன் கிழங் கு டன் நிறுத்தி வைக் கப் பட்டி ருந்த 60க்கும் மேற் பட்ட லாரி களை, அரவை மில் லுக்கு அனுப்பி வைத் த னர். இத னால் கடந்த 2 நாட் க ளாக, சேகோ ஆலை களில் நில விய பதற் றம் தணிந்து, இயல்பு நிலை திரும் பி யது.

No comments:

Post a Comment