Oct 17, 2015

சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்: நுகர்வோர் விழிப்புணர்வு பிரசார வாகனம்

சேலம், அக்.17-நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த தகவல்களை மேம்படுத்தவும், நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கிலும் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமையியல் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மற்றும் தொழிலாளர் துறையினர், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
நுகர்வோர் விழிப்புணர்வு வாகனமானது சேலம் மாவட்டத்தில் வருகிற 23-ந் தேதிவரை பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்ளும் என மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment