Jun 5, 2015

மேகி நூடுல்சை திரும்ப பெற்றுக்கொள்ள நெஸ்லே முடிவு

புதுடில்லி: அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயன பொருள் அதிகமாக இருந்ததாக புகாரின் பேரில், தமிழகம், டில்லி, குஜராத், உத்தர்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸ் விற்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விற்பனையில் உள்ள பொருட்களையும் திரும்ப பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மேகி நூடுல்சை திரும்ப பெற்றுக்கொள்ள நெஸ்லே நிறுவனம் திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மேகி நூடுல்சை திரும்ப பெற்றுக்கொள்கிறோம். விரைவில் சந்தைகளில் இருந்து திரும்ப பெற்று கொள்ளப்படும். நுகர்வோரின் நம்பிக்கை மற்றும் உற்பத்தி பொருட்களின் தரமுமே எங்களது முக்கியம் என நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment