Apr 8, 2015

முண்டியம்பாக்கத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி


விக்கிரவாண்டி, ஏப். 8:
விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு எதிரே உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருத்துவ கல்லூரி சமுதாய துறை சார்பில் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்எம்ஓ மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரி டீன் உஷா சதாசிவன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படம், அந்த பொருட்களுக்கான வித்தியாசம் மற்றும் எந்தெந்த உணவில் என்ன சத்து பொருட்கள் இருக்கின்றன போன்றவற்றை கண்காட்சியை பார்த்த பொது மக்களுக்கு விளக்கமளித்தனர்.
சமுதாய துறை டாக்டர்கள் ஸ்ரீராதா, சரண்யா, நல கல்வியாளர்கள் சுதா, ஜெயச்சந்திரன், ஆய்வக நுட்புனர் கண்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவிக்குமார், கதிரவன், சமரேசன், ஷேக்அலி, ஜெயராஜ், முருகதாஸ், பழனிசாமி, சங்கரலிங்கம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment