Apr 8, 2015

ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


திண்டுக்கல், ஏப். 8:
திண்டுக்கல் நகர் பகுதியில் நேற்று உணவு பாதுகாப்பு துறை சார்பில், மாவட்ட நியமன அலுவலர் சாம் இளங்கோ, உணவு பாதுகாப்பு அதிகாரி செல் வம் ஆகியோர் திடீர் சோத னையில் ஈடுபட்டனர். அப் போது மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் பதுக்கி வைக்கப்பட் டது தெரிய வந்தது. இதை அடுத்து 2ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான புகை யிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர்.இதுகுறித்து சாம் இளங்கோ கூறுகையில், இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின கீழ் சோதனை நடந்தது. திண்டுக்கல்லில் குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அதில் போதையின் அளவுக்கு ஏற்ப, உரிமையாளருக்கு அபராதம் மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment