Mar 31, 2015

காளான் சாப்பிட்ட 7 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

கோவை, மார்ச் 31:குனியமுத்தூர்
திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர்கள் செரீப்(28), ரகமத்துல்லா(28), ஷாஜகான்(28), ரியாஸ்(28), சமீர்(21) உள்பட 7 பேர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு கரும்பு கடை பகுதியில் உள்ள ஒரு காளான் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு பானிபூரி, காளான் வாங்கி சாப்பிட்டனர். இந்நிலையில், நேற்று காலையில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம், தொடர் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உடனடியாக அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் 7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment