Dec 18, 2014

15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, டிச. 18:
விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் நேற்று காலை உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் கடை வீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகன், இப்ராகிம் ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து 10க்கும் மேற்பட்ட கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 2 கடைகளில் இருந்து ரூ 15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment