Nov 6, 2014

திருமலையில் அதிரடி குட்காவுடன் சட்டீஸ்கர் மாநில வாலிபர்கள் 2 பேர் கைது



திருமலை, நவ. 6:திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் குட்கா, மாமிசம், புகையிலை, மது போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தவோ, வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமலையில் உள்ள சிஎன்சி சோதனை சாவடி அருகே விஜிலெனஸ் அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டிஸ்கர் மாநிலம் முஹூவில் இருந்து வந்த 2 பக்தர்களிடம் உள்ள உடமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பேக்கில் 50 குட்கா பாக்கெட்டுக்கள், சூதாட்ட கார்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சுனில், ஜூலா ஆகியோர் என தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களை பிடித்து 2வது காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் வெங்கட்ரமணா வழக்குப்பதிவு செய்து அவர்களை கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து குட்கா மற்றும் சூதாட்ட கார்டுகளை பறிமுதல்செய்தனர்.

No comments:

Post a Comment