Oct 16, 2014

பாலில் கலப்படம் பால் வியாபாரிக்கு 3 மாதம் சிறை



சாத்தூர், அக். 16:
பாலில் கலப்படம் செய்து விற்ப னை செய்த வழக்கில் பால் வியாபாரிக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து சாத்தூர் கோர்ட் தீர்ப்பளித்தது.
சாத்தூர் நகராட்சி பகுதிகளில் நகராட்சி உணவு ஆய்வாளர் நாராயணன் கடந்த 2010ம் ஆண்டு ரோ ந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களு க்கு விநியோகிக்கப்படும் பால் தரத்தை ஆய்வு செய்துள்ளார். இதில் சின்னகொல்லபட்டியை சேர்ந்த பால் வியாபாரி சோலை ராஜ் கொண்டு வந்த பசும்பாலில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
உணவு கலப்பட தடைச்சட்ட இணை இயக்குநர் மற்றும் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் ஆலோசனையின் பேரில் பால் வியாபாரி சோலை ராஜ் மீது சாத்தூர் கோர் டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், பால் வியாபாரிக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ஆயி ரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment