Oct 9, 2014

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி கடைவீதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆறுமுகம் தலைமையில் பாதுகாப்பு அலுவலர்கள் ரவிக்குமார், பாரதி, பன்னீர் செல்வம் , கதிரவன் ஆகியோர் நேற்று காலை விக்கிரவாண்டி கடைவீதியில் உள்ள மளிகை, டீக்கடை, ஓட்டல் ,பங்க் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் கலாவதியான உணவு பொருட்கள், புகையிலையை பறிமுதல் செய்து கடைக்காரர்களை எச்சரித்தனர்.

No comments:

Post a Comment