Sep 17, 2014

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


திருவெண்ணெய்நல்லூர், செப். 17:
திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் உள்ள உணவகம், பேக்கரி, ஸ்வீட்ஸ் டால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முருகன், சமரேசன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் உணவகங்களில் பாதுகாப்பற்ற உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். மேலும் உணவு தயார் செய்யும் இடங்களை பார்வையிட்டு சுகாதாரமாக வைக்கப்படாத உணவு பொருட்களை அதிரடியாக அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து சில உணவகங்களில் தண்ணீர் டேங்க் மற்றும் சுகாதாரமான சமையல் கூடம் இல்லாமல் இருந்ததால் அதை மாற்றம் செய்ய அவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் வழங்கினர்.
மீண்டும் இதுபோன்று சுத்தமான உணவுகளை விற்பனை செய்யவில்லை என்றால் அவரின் மீது நடவடிக்கை எடுத்து கடை சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து சென்றனர்.

No comments:

Post a Comment