Sep 18, 2014

50 ஆயிரம் போதை பொருள்கள் பறிமுதல் : அதிகாரிகள் அதிரடி



மரக்காணம், செப். 18:
விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ஆறுமுகம் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர் குழுவினர் மரக்காணத்தில் நேற்று போதை பொருட்கள் பயன்பாடு, விற்பனை குறித்து தீவிர ஆய்வு செய்தனர்.
சன்னதி வீதி, பாண்டிரோடு, சந்தை தோப்பு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி, ஓட்டல் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட, புகையிலை பொருட்களான, குட்கா, ஹன்ஸ் போன்ற ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பேக்கரியில் தடை செய்யப்பட்ட நிறமிகளை கேக், மிக்சர் போன்றவற்றில் கலப்படம் செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க எடுத்து சென்றனர். சோதனையின் போது, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணகுமார், சந்திரசேகர், முருகன், மோகன், கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment