Sep 18, 2014

ஈரோடு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு, செப். 18:
ஈரோடு அசோகபுரம் தீரன் சின்னமலை வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கமலஹாசன் (34). இவர் நடத்தி வரும் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக கோவை திட்டமிட்ட குற்ற நுண் ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு தடுப்பு மற்றும் நியமன அலுவலர் கருண �நிதி தலைமையிலான குழுவினர் நேற்று கமலஹாசனின் மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகள் இருந்ததையும் அதிகாரிகள் குழுவினர் கண்டு பிடித்தனர்.
இதில் 20 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவருக்குச் சொந்தமான குடோனில் சோதனை நடத்தப்பட்டு, அங்கு பெட்டி, பெட்டியாக இருந்த புகையிலை பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

No comments:

Post a Comment