Jul 14, 2014

நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 லட்சம் புகையிலை பொருள் கடத்தல் - பாதுகாப்பு படை பறிமுதல்



செங்கல்பட்டு, ஜூலை 14 :
நிஜாமுதீனில் இருந்து சென்னை வழியாக மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் போதை பொருள் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டை அடைந் தது. அங்கு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.ஐ சுனில்குமார் உள்பட போலீசார் அந்த ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இன்ஜினுக்கு பக்கத்து பெட்டியில் ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண் டனர். அவற்றை சோதனை செய்து பார்த்தனர். 24 மூட்டைகளில் தலா 40 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட போதை பொருளான ஹன்ஸ் பாக்கெட்கள் சிக்கியது. இதன் மதிப்பு 5 லட்சம். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், செங்கல்பட்டு நகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றனர். அங்கு நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஷ் முன்னிலையில், நகர் நல அலுவலர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அதனை தீயிட்டு அழித்தனர்.

No comments:

Post a Comment