Jun 20, 2014

புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிவகங்கை, ஜூன் 19:
சிவகங் கை அருகே ஒக்கூர், சோழ புரம் பகுதி கடைகளில் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
சிவகங்கை அருகே உள்ள கடைகளில் புகையிலை, பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர். இதில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், காலாவதியான மாவு பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், உணவு பொருட்களையும் பறிமுதல் செய்து அழித்தனர். தேதி அச்சிடப்படாத முறுக்கு, மிக்சர், அதிரசம் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்க ளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகர்களி டம் எச்சரிக்கை செய்தனர். உரிமம் இல்லாத கடைகளு க்கு உடனடியாக உரிமம் எடுக்குமாறும், உரிமத்தை புதுப்பிக்குமாறும் வலியுறுத்தினர். இதில் சிவகங்கை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், திருப்பத்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment