Jun 14, 2014

வாழப்பாடியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

வாழப்பாடி, ஜூன் 13:
வாழப்பாடியில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை, பேக்கரி, ஓட்டல், தள்ளுவண்டிகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாவட்ட பாதுகாப்பு உணவு அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் வாழப்பாடியில் உள்ள டீ கடை, பெட்டிக்கடை, பேக்கரி, ஹோட்டல்கள், பஸ்நிலைய கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கெட்டுப்போன பன், கேக்குகள், தடை செய்யப்பட்ட பகையிலை பொருட்கள், காலாவதியான பிஸ்கெட்டுகள், டீத்தூள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், 1000 குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதன் பின்னர் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா கூறுகையில், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்காரர்களுக்கு அபராத தொகை விதிக்கப்படும். மே லும், சட்டப்படி யான நடவ டிக் கை மேற்கொ ள்ள ப்ப டும் என் றார்.

No comments:

Post a Comment